Published : 18 Sep 2025 03:42 AM
Last Updated : 18 Sep 2025 03:42 AM

‘இந்து தமிழ் திசை’யின் அனைத்து செய்திகளும் தனிச்சிறப்பானவை: நயினார் நாகேந்திரன், ஜி.கே. வாசன், மு.வீரபாண்டியன் வாழ்த்து

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதல் பக்​கம் முதல் கடைசி பக்​கம் வரை இடம்​பெறும் செய்​தி​கள் ஒவ்​வொன்​றும் தனிச்​சிறப்​புக்​குரியது என்று நாளிதழின் 13-ம் ஆண்டு தொடக்​கத்தை முன்​னிட்டு வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் ஆகியோர் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்கள் அனுப்​பி​யுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மலர்ந்து 12-ம் ஆண்டு நிறைவு பெற்​று, தனது 13-ம் ஆண்​டில் சாதனை தடத்தை பதித்​திருப்​பதை அறிந்து மட்​டில்லா மகிழ்ச்சி கொள்​கிறேன்.

இந்​திய தேச ஒற்​றுமை​யை​யும் ஒரு​மைப்​பாட்​டை​யும், தன் கண்​களாக காத்து வரும் இதழ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ். அதோடு மட்​டுமில்​லாமல் தமிழகத்​தின் கலாச்​சா​ரம் மற்​றும் பண்​பாடு ஆகிய​வற்றை பிர​திபலிக்​கும் ஒரு ஊடகக் கண்​ணாடி​யாக திகழ்ந்து வரு​கிறது. குறிப்​பாக முதல் பக்கம் முதல் கடைசி பக்​கம் வரை இடம்​பெறும் செய்​தி​கள் ஒவ்​வொன்​றும் தனிச்​சிறப்​புக்​குரியது.

முக்​கிய​மாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘கருத்​துப் பேழை’ பகு​தி​யில் இடம்​பெற்​றுள்ள செய்​தி​கள் அனைத்​தும் நமது பழங்​கால பண்​பாட்​டு, கலாச்​சா​ரங்​களைச் சொல்​லும் ‘பனைஓலை’ செய்​தி​யாகவே கருதுகிறேன்.

இந்த சிறப்​புக்​குரிய ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நிர்​வாகி​களுக்​கும், ஆசிரியர் குழு​வினருக்​கும், செய்​தி​யாளர்​களுக்​கும், வாசகப் பெரு​மக்​களுக்​கும், என் நெஞ்​சார்ந்த வாழ்த்​துக்​களைத் தெரி​வித்து அனை​வரை​யும் பாராட்டி மகிழ்​கிறேன்.

தமாகா தலை​வர் ஜி.கே. வாசன்: ‘இந்து தமிழ் திசை’ தமிழ் நாளிதழ் 13-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைப்​பது மிகுந்த மகிழ்ச்​சி​யளிக்​கிறது. பத்​திரிகை துறை​யின் மூலம் தொடர்ந்து மக்​கள் பணி​யாற்ற மனம் நிறைந்த நல் வாழ்த்​துக்​கள். ‘தி இந்​து’ ஆங்​கில நாளிதழின் ஓர் அங்​க​மாக கடந்த 2013- ம் அண்டு தொடங்​கப்​பட்ட இந்து தமிழ் திசை நாளிதழ் நாடும், நாட்டு மக்​களும் பயன்​பெறும் வகை​யில் வணி​கம், கல்​வி, விளை​யாட்​டு,
சுற்​றுச்​சூழல், இலக்​கி​யம், வினாடி வினா, பொழுது​போக்​கு, சினி​மா, சிறப்பு கட்​டுரை, ஆன்​மீகம், சிந்​தனை களம், தேசிய மற்​றும் சர்​வ​தேச செய்​தி​களை உடனுக்​குடன் மக்​களிடம் கொண்டு சென்று மக்​கள் மனதில் நிறைந்​துள்​ளது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து அரசு திட்​டங்​களை​யும், செயல்​பாடு​களை​யும், பொது பிரச்​சனை​களை​யும், அனை​வரும் புரிந்​து​கொள்ளும் வகை​யில் மக்​களிடம் கொண்டு செல்​வது தனிசிறப்​பு. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெற்​றிகர​மாக 13-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைத்து அனைத்து தரப்பு மக்​கள் மனதி​லும் நீங்கா இடம் பிடித்​துள்​ளது. நாளிதழ் வெற்​றிகர​மாக வெளிவர அயராது பாடு​படும் ஆசிரியர் குழு​வினர்​களுக்​கும், நிருபர்​களுக்​கும், தொழில்​நுட்ப கலைஞர்​களுக்​கும், புகைப்பட கலைஞர்​களுக்​கும், வடிவ​மைப்​பாளர்​களுக்​கும் மற்​றும் அனைத்து பணி​யாளர்​களுக்​கும் நல் வாழ்த்​துக்​கள். தமிழ் பத்​திரிகை உலகில் சிறப்​புடன் விளங்கி தேசமெங்​கும் மென்​மேலும் புகழ்பெற தமிழ் மாநில காங்​கிரஸ் சார்​பில்​ ​வாழ்​த்​து​கிறேன்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தமிழின் மகத்​தான பண்பு கூறுகளை, அதன் செவ்​வியல் கூறுகளை, அதன் இலக்​கிய வடிவங்​களை கட்​டுரைகளாக, கவிதைகளாக கோடிக்​கணக்​கான தமிழ் மக்​களிடம் கொண்டு சேர்த்​திருக்​கிறது. மிகச்சிறந்த அரசி​யல் விற்​பன்​னர்​களின் கட்​டுரைகளை, பகுத்​தறிவை, சுயமரி​யாதையை, சமதர்​மத்தை வளர்க்​கிற எண்​ணிலடங்கா கட்​டுரைகளை அது நாளும் வெளி​யிட்​டு, மகத்​தான முத்​திரையை பதித்​திருக்​கிறது. வேறு எந்த நாடு​களிட​மும் ஒப்​பிட முடி​யாத அளவு உயர்ந்த ஜனநாயகத்தை கொண்​டது நம் நாடு. இந்த நாட்​டின் பன்​முகம், மதச்​சார்​பின்​மை, மகத்​தான கருத்​தாக்​கம் ஆகிய​வற்​றுக்கு பாதிப்பு ஏற்​படும் போதெல்​லாம் ‘இந்து தமிழ் திசை’ அதை எதிர்த்து நின்று இருக்​கிறது. இது தான் இந்​நாளிதழின் மகத்​தான கூறு.

ஒடுக்​கப்​படு​கிற மக்​கள், ஏழை, எளிய மக்​கள், தொழிலா​ளர்​கள் உரிமை​களுக்​காக போராடு​கிற போது கடந்து சென்​று​வி​டா​மல் அந்த போராட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளித்​திருக்​கிறது. இவ்​வாறு 12 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தற்​போது 13-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் மகிழ்ச்​சி​யான தருணத்​தில் ‘இந்து தமிழ் திசை’க்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மனப்​பூர்​வ​மான பாராட்​டுக்​களை தெரி​வித்​துக் கொள்​கிறது. அதன் பயணம்​ தொடரட்​டும்​. வெல்​லட்​டும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x