Published : 17 Sep 2025 05:46 AM
Last Updated : 17 Sep 2025 05:46 AM

கைலாஷ் யாத்திரை ரத்தான விவகாரம்: முன்பதிவு செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கைலாஷ் யாத்​திரை ரத்​தான​தால் பாதிக்​கப்​பட்​ட​வருக்கு ரூ.75 ஆயிரம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என சுற்​றுலா நிறு​வனத்​துக்​கு, நுகர்​வோர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

புதுச்​சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்​திய அரசு அதி​காரி ராம​நாதன், நுகர்​வோர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்​ப​தாவது: நானும் என் மனை​வி​யும், கைலாஷ் மானசரோவர் யாத்​திரை செல்​வதற்​காக, கடந்த 2023-ம் ஆண்டு கோ​யம்​பேட்டில் செயல்​பட்டு வரும் சுற்​றுலா நிறு​வனத்​திடம் ரூ.20 ஆயிரம் செலுத்தி முன்​ப​திவு செய்​தோம். மத்​திய அரசு அனுமதியளிக்காத​தால் யாத்​திரை ரத்து செய்​யப்​பட்​டது.

தொடர்ந்து, முன்​பணத்தை திருப்பி செலுத்​தாமல் நிறு​வனம் அலைக்​கழித்​தது. சுற்​றுலா​வுக்​கும் அழைத்​துச் செல்​ல​வில்​லை. எனவே, இழப்​பீட்டு தொகை​யும் முன்​ப​திவு கட்​ட​ணத்​தை​யும் வழங்க சுற்​றுலா நிறு​வனத்​துக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில், “கைலாஷ் யாத்​திரையை மீண்​டும் தொடங்​கு​வது குறித்து இந்​திய மற்​றும் சீன அரசுகள் உறு​திப்​படுத்​தாத​போது, மக்​களை கவர்ந்​திழுக்​கும் வகை​யில் சுற்​றுலா நிறு​வனம் விளம்​பரம் வெளி​யிட்​டுள்​ளது. இதன் மூலம், பணம் வசூலித்து நியாயமற்ற வர்த்​தகத்​தில் ஈடு​பட்​டுள்​ளது. எனவே, பதிவுக் கட்​ட​ணம் ரூ.20 ஆயிரத்​துடன், இழப்​பீ​டாக ரூ.55 ஆயிரம் என மொத்​தம் ரூ.75 ஆயிரத்தை மனு​தா​ரருக்கு வழங்க வேண்​டும்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x