Published : 17 Sep 2025 05:30 AM
Last Updated : 17 Sep 2025 05:30 AM

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்தநாள்: முதல்வர், அரசியல் தலைவர்கள் மரியாதை

சென்னை: சுதந்​திர போராட்ட வீரர் எம்​.எஸ்​.​ ராம​சாமி படை​யாட்​சி​யின் 108-வது பிறந்த தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அமைச்​சர்​கள் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர்.

சுதந்​திர போராட்ட வீரரரும், முன்​னாள் அமைச்​சரு​மான ராம​சாமி படை​யாட்​சி​யின் 108-வது பிறந்த தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி, தமிழக அரசின் சார்​பில் கிண்டி ஹால்டா சந்​திப்​பில் உள்ள ராம​சாமி படை​யாட்​சி​யின் சிலைக்கு கீழ் மலர்​களால் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது படத்​துக்கு முதல்​வர்​.ஸ்​டா​லின் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் எம்​ஆர்கே பன்​னீர்​செல்​வம், மா.சுப்​பிரமணி​யன், மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார், எம்​பிக்​கள் ஜெகத்​ரட்​சகன், தமிழச்சி தங்​க​பாண்​டியன், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஏஎம்வி பிர​பாகர​ராஜா, எஸ்​எஸ் பாலாஜி, அரவிந்த் ரமேஷ், கே.கணப​தி, தமிழ்​வளர்ச்சி மற்​றும் செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன், செய்தி மக்​கள் தொடர்​புத்​துறை இயக்​குநர் இரா.​வைத்​தி​ய​நாதன் மற்​றும் ராம​சாமி படை​யாட்​சி​யார் வாழப்​பாடி பேரவை தலை​வர் சைதை வீ.தேவ​தாஸ், வன்​னியர் கூட்​டமைப்​பின் நிர்​வாகி சி.ஆர்​.​பாஸ்​கரன், ராம​சாமி படை​யாட்​சி​யின் குடும்​பத்​தினர் மற்​றும் அரசு அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

மேலும், தமிழ்​நாடு காங்​கிரஸ் கட்சி சார்​பில் மாநில தலை​வர் கு.செல்​வபெருந்​தகை, முன்​னாள் தலை​வர்​கள் கே.வீ. தங்​க​பாலு, எம்​.கிருஷ்ண​சாமி ஆகியோர் ராம​சாமி படை​யாட்​சி​யின் படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர். இந்​நிகழ்ச்​சி​யில், நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் ராபர்ட் புரூஸ், சுதா ராமகிருஷ்ணன், தென்​சென்னை மத்​திய மாவட்ட தலை​வர் எம்​.ஏ.​முத்​தழகன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் கே.பழனி​சாமி டெல்​லி​யில் ராம​சாமி படை​யாட்​சி​யின் படத்​துக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், கட்​சி​யின் துணை பொது செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சி.சீனி​வாசன், நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் மு.தம்​பிதுரை, ஐ.எஸ்​.இன்​பதுரை, ம.தன​பால், தலைமை நிலை​யச் செய​லா​ளர் எஸ்​.பி.வேலுமணி, அமைப்​புச் செய​லா​ளர் சி.வீ.சண்​முகம் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வர் வாழ்த்து: ராம​சாமி படை​யாட்​சி​யின் பிறந்​த​நாளை​யொட்டி முதல்​வர் ஸ்டா​லின் சமூகவலைத்​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “இந்​திய நாட்​டின் விடு​தலைக்கு போராடிய வீரரும், முன்​னாள் அமைச்​சரும், உழைக்​கும் மக்​களின் உரிமை​களுக்​காக முன்​னின்ற சமூகநீ​தித்​ தலை​வரு​மான ராம​சாமி படை​யாட்​சி​யின் பிறந்த நாளில் அவரது பங்​களிப்​பு​களை போற்றி வணக்​கம் செலுத்​தினேன்” என குறிப்​பிட்​டுள்​ளார்.

பாமக தலை​வர் அன்​புமணி ராம​தாஸ்: இந்​திய விடு​தலைக்​காக​வும், சமூக விடு​தலைக்​காக​வும் இளம்​வய​தில் இருந்தே போராடிய பெரு​மைக்​குரிய பெரிய​வர் எஸ்​.எஸ். ராம​சாமி படை​யாட்​சி​யின் 108-ஆம் பிறந்​த​நாளில் அவரை வணங்கி மகிழ்​கிறேன். பாட்​டாளி மக்​களின் சமூகநீ​திக்​காக அவர் மேற்​கொண்ட முன்​னெடுப்​பு​கள் குறிப்​பிடத்​தக்​கவை. அவரின் பணி​களைப் போற்​றும் இந்​நாளில், சமூகநீ​திக்​கான போராட்​டங்​களை இன்​னும் தீவிர​மாக வெற்​றிக் கொடி நாட்ட உறு​தி​யேற்​போம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: சுதந்​திர போராட்ட வீர​ரான ராம​சாமி படை​யாட்​சி, பிற்​படுத்​தப்​பட்ட மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட மக்​களின் நலனுக்​காக​வும், முன்​னேற்​றத்​துக்​காக​வும் தன் வாழ்​நாளை அர்ப்​பணித்​தவர். சாதாரண விவ​சாய குடும்​பத்​தில் பிறந்து சாதி, மதத்​துக்கு அப்​பாற்​பட்​டு, அனை​வரிட​மும் அன்பு செலுத்​தி​ய​வர். சமு​தா​யத்​தில் பின்​தங்​கிய நிலை​யில் இருந்து விளிம்பு நிலை மக்​களுக்​காக தொண்​டாற்​றிய​வர். அவரின் அரும்பெரும்பணிகளை போற்றி வணங்குவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x