Last Updated : 17 Sep, 2025 10:54 AM

2  

Published : 17 Sep 2025 10:54 AM
Last Updated : 17 Sep 2025 10:54 AM

தங்கமணிக்கு எதிராக தடதடக்கும் மாஜி எம்எல்ஏக்கள்! - செப்.19 நாமக்கல்லில் என்ன நடக்கும்?

அதிமுக-வை ஒருங்கிணைக்க தனக்கு 10 நாள் கெடு வைத்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை இபிஎஸ் பறித்திருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான பி.தங்கமணிக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் அணி திரட்டி வருவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

நாமக்​கல் மாவட்​டத்​தில் செப்​டம்​பர் 19, 20, 21 ஆகிய 3 நாட்​கள் எடப்​பாடி பழனி​சாமி பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள இருக்​கி​றார். இந்​தப் பயணம் தொடர்​பாக நாமக்​கல் மாவட்ட அதி​முக ஆலோ​சனைக் கூட்​டம் நாமக்​கல்​லில் உள்ள மாவட்ட தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 2-ம் தேதி நடை​பெற்​றது. முன்​னாள் அமைச்​சரும் மாவட்​டச் செய​லா​ள​ரு​மான பி.தங்​கமணி தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர் சரோஜா, பரமத்​திவேலூர் எம்​எல்​ஏ-​வான சேகர், முன்​னாள் எம்​எல்​ஏ-க்​கள் சரஸ்​வ​தி, கலா​வதி உள்​ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலை​யில், நாமக்​கல் நகரச் செய​லா​ள​ரும், முன்​னாள் எம்​எல்​ஏ-வு​மான கே.பி.பி.​பாஸ்​கரும் அவரது ஆதர​வாளர்​களும் கலந்​து​கொள்​ளாமல் புறக்​கணித்​தனர்.

அண்​மை​யில் அதி​முக-​வில் இணைந்த சேந்​தமங்​கலம் அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சி.சந்​திரசேகரனும் இந்​தக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​ள​வில்​லை. இந்​தக் கூட்​டம் நடப்​பது குறித்து முறை​யாக தகவல் தெரிவிக்​காததே அவர்​கள் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​ளாததற்​குக் காரணம் என்று சொல்​லப்​படும் நிலை​யில், “ஆனால், அது​மட்​டுமே காரணம் கிடை​யாது.

நாமக்​கல் மாவட்ட அதி​முக-வை கிழக்​கு, மேற்கு என இரண்​டாகப் பிரிப்​பது உள்​ளிட்ட பல விஷ​யங்​கள் தொடர்​பாக பாஸ்​கருக்​கும், தங்​கமணிக்​கும் இடையே நீண்ட கால​மாக பனிப்​போர் நடக்​கிறது. அதனால், ஆட்​சி​யில் இருந்​த​போதே பாஸ்​கர் விவ​காரத்​தில் தங்​கமணி தலை​காட்​ட​மாட்​டார். கட்சி அறிவிக்​கும் போராட்​டங்​கள் எது​வாக இருந்​தா​லும் மாவட்​டத்​தின் பிற பகு​தி​களில் தான் நடக்​கும் மாவட்​டத் தலைநக​ரான நாமக்​கல்​லில் நடக்​காது. இத்​தனை நாளும் வெளி​யில் தெரி​யாமல் இருந்த இந்​தப் புகைச்​சல் இப்​போது வெளி​யில் தெரிய ஆரம்​பித்​திருக்​கிறது.

சேந்​தமங்​கலம் முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சந்​திரசேகரன் 2021-ல் இரண்​டாவது முறை​யாக வாய்ப்​புக் கேட்​டார். ஆனால், தங்​கமணி அவருக்கு சிபாரிசு செய்​ய​வில்​லை. அதனால் கட்​சி​யை​விட்டு விலகி சுயேச்​சை​யாக போட்​டி​யிட்ட சந்​திரசேகரன், அதி​முக-வை தோற்​கடித்​தார். மீண்​டும் இப்​போது அதி​முக-வுக்கு திரும்​பி​யுள்ள சந்​திரசேகரனுக்கு தங்​கமணி மீதான தனது பழைய கோபம் தீர​வில்​லை. அதனால் அவரும் ஆலோ​சனைக் கூட்​டத்​தைப் புறக்​கணித்​திருக்​கி​றார்” என்​ற​னர்.

இதுதொடர்​பாக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான பாஸ்​கரிடம் கேட்​ட​போது, “நாமக்​கல் தொகுதி ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தி​ய​போது மாவட்​டச் செய​லா​ளர் என்ற முறை​யில் தங்​கமணிக்கு அழைப்பு விடுத்​தோம். ஆனால், அவர் வரவில்​லை. அது​போல் பொதுச்​செய​லா​ளர் நாமக்​கல் வழி​யாக திருச்சி சென்​ற​போது நாமக்​கல் மாவட்ட அதி​முக அலு​வல​கத்​தில் இருந்த தங்​கமணி, அவரை வரவேற்க வரா​மல் புறக்​கணித்​தார். கடந்த 4 ஆண்​டு​களில் மாவட்​டக் கழகத்​தின் சார்​பில் நாமக்​கல்​லில் ஒரு ஆர்ப்​பாட்​டம் கூட நடத்​தப்​பட​வில்​லை.

நாமக்​கல் அதி​முக-​வில் தங்​கமணி எப்​படி வளர்ந்​தாரோ அது​போலத்​தான் நானும் படிப்​படி​யாக வளர்ந்​திருக்​கிறேன். ஆனால், நாமக்​கல்​லில் நடக்​கும் எந்த நிகழ்ச்​சி​யிலும் எனது பெயரை போடு​வ​தில்​லை. ஆனால், நேற்​றைக்கு மாநிலப் பொறுப்​புக்கு வந்த ஒரு​வரின் பெயரைப் போடு​கி​றார்​கள். இதுபற்​றியெல்​லாம் நாங்​கள் பொதுச்​செய​லா​ளரை சந்​தித்​துப் பேசி​விட்டு வந்த பிறகு தான் பிரச்​சினை இன்னும் பெரி​தாகி​யுள்​ளது” என்​றார்.

முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சந்​திரசேகரனோ, “கூட்​டம் தொடர்​பாக எனக்கு மாவட்ட அலு​வல​கத்​தில் இருந்து எந்த அழைப்​பும் வரவில்​லை. அதனால் நான் பங்​கேற்​க​வில்​லை. பொதுச்​செய​லா​ளர் எங்​கள் தொகு​திக்கு வரும்​போது சிறப்​பான முறை​யில் வரவேற்பு தரப்​படும். பொதுச்​செய​லா​ளர் (முதல்​வ​ராக) வரக்​கூ​டாது என அவர் (தங்​கமணி) நினைக்​கி​றார். 2021-ல் கொங்கு மண்​டலத்​தில் நாமக்​கல் மாவட்​டத்​தில் மட்​டும் தான் குறை​வான இடங்​களில் அதி​முக வெற்றி பெற்​றது” என்​றார்.

இதுதொடர்​பாக தங்​கமணி​யின் கருத்தை அறிய அவரை பலமுறை தொடர்பு கொண்​டும் அவர் நமது அழைப்பை ஏற்​க​வில்​லை. இறு​தி​யாக அவரது உதவி​யாளர் சேகரிடம் இதுபற்றி பேசினோம். “மாவட்ட அலு​வல​கத்​தில் இருந்து தான் அனை​வ​ருக்​கும் வழக்​க​மாக தகவல் அளிப்​பார்​கள். எனவே யாருக்​கும் தகவல் சொல்​லாமல் இருந்​திருக்க வாய்ப்பில்​லை. அமைச்​சருக்கு (தங்​கமணி) அறுவை சிகிச்சை செய்​திருப்​ப​தால் அவர் போனை எடுத்​துப் பேசாமல் இருந்​திருக்​கலாம்” என்று சொன்​னார் அவர்.

எதிர்க்​கட்சி வரிசை​யில் இருந்து கொண்டு இப்​படி ஆளாளுக்கு குறுநில மன்​னர்​களைப் போல் அரசாட்சி நடத்​திக் கொண்​டிருந்​தால் எடப்​பாடி​யார் என்​றைக்கு மக்​களை காப்​பது… தமிழகத்தை மீட்​பது?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x