Last Updated : 17 Sep, 2025 10:22 AM

2  

Published : 17 Sep 2025 10:22 AM
Last Updated : 17 Sep 2025 10:22 AM

அமைச்சராகி 50 நாளாச்சு... இலாகா ஒதுக்கீடு என்னாச்சு? - பிரேக் போடும் ரங்கசாமி... பேசாமல் இருக்கும் பாஜக!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வரையும் சேர்த்து மொத்தம் 6 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில், முதல்வர் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் என்.ஆர்.காங்கிரஸ் வைத்துக்கொண்ட நிலையில், இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகள் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டன.

முதல்​வ​ராக 2021 மே 7-ல் ரங்​க​சாமி பொறுப்​பேற்ற நிலை​யில், அதன் பிறகு 50 நாட்​கள் கழித்து ஜூன் 27-ல் தான் மற்ற அமைச்​சர்​கள் பொறுப்​பேற்​ற​னர். பாஜக-​வில் முதலில் நமச்​சி​வாய​மும், சாய் ஜே.சர​வணன்​கு​மாரும் அமைச்​சர்​களாகப் பொறுப்​பேற்​றார்​கள்.

இதையடுத்​து, பாஜக எம்​எல்​ஏ-​வான ஜான்குமாருக்கு அமைச்​சர் பதவி கிடைக்​காததைக் கண்​டித்து அவரது ஆதர​வாளர்​கள் பாஜக அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டனர். ஆனாலும், வேலை நடக்​க​வில்​லை. எனினும் ஜான்குமார் அமைச்​ச​ராகும் முயற்​சிகளை தொடர்ந்து கொண்டே இருந்​தார். இதனிடையே, அமைச்​சர் மற்​றும் வாரி​யத் தலை​வர் பதவி​களை எதிர்​பார்த்து ஏமாந்து போன பாஜக எம்​எல்​ஏ-க்​கள், சுயேச்​சைகள் சிலரை சேர்த்​துக் கொண்டு தனி அணி​யாக செயல்​பட்​டனர்.

இந்த நிலை​யில், மக்​கள​வைத் தேர்​தல் தோல்​வியை அடுத்து அதிருப்தி எம்​எல்​ஏ-க்​களை திருப்​திப்​படுத்​து​வதற்​கான வேலை​களை முன்​னெடுத்​தது பாஜக டெல்லி தலை​மை. அதன் ஒரு பகு​தி​யாக, டெல்​லி​யின் உத்​தர​வால் பாஜக அமைச்​சர் சாய் ஜே.சர​வணன்​கு​மார் தனது பதவியை ஜூன் 27-ல் ராஜி​னாமா செய்​தார்.

அவருக்​குப் பதிலாக, அதிருப்​தி​யில் இருந்த ஜான்குமார் அமைச்​சர​வைக்​குள் கொண்​டு​வரப்​பட்​டார். அமைச்​ச​ராக அறிவிக்​கப்​பட்ட பிறகும் 2 வார காத்​திருப்​புக்​குப் பிறகே ஜூலை 14-ல் அமைச்​ச​ராகப் பொறுப்​பேற்​றார் ஜான்குமார். ஆனபோதும், அவருக்கு துறை​கள் ஏதும் ஒதுக்​கப்​ப​டாத​தால் 50 நாட்​களைக் கடந்​தும் இலாகா இல்​லாத அமைச்​ச​ராகவே தொடர்​கி​றார் ஜான்​கு​மார்.

இதுபற்றி புதுச்​சேரி சட்​டப்​பேரவை வட்​டாரங்​களில் விசா​ரித்​த​போது, "அமைச்​ச​ராக இருந்த சாய் ஜே.சர​வணன்​கு​மார், ஆதி​தி​ரா​விடர் நலன்,
தீயணைப்​பு, சிறு​பான்​மை​யினர் நலன் உள்​ளிட்ட துறை​களை கவனித்து வந்​தார். ஆனால், ஜான்​கு​மாருக்கு அப்​படியே சாய் சரவணன் வைத்​திருந்த துறை​களை ஒதுக்​காமல் அவருக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த துறை​களை ஒதுக்க நினைக்​கிறது பாஜக தலை​மை.

அப்​படி முக்​கிய துறை​களை அவருக்கு ஒதுக்​கி​னால், என்​.ஆர்​.​காங்​கிரஸ் அமைச்​சர்​களுக்​கும் இலாகா மாற்ற வேண்டி வரலாம். இல்​லா​விட்​டால் முதல்​வரே தன்​வசம் உள்ள சில துறை​களை விட்​டுக்​கொடுக்க வேண்டி இருக்​கும். ஆனால், ‘அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் வரப்​போவ​தால் இப்​போது கூட்​ட​ணிக்​குள் எந்​தக் குழப்​ப​மும் செய்ய வேண்​டாம். அப்​படி அவசி​யம் ஏற்​பட்​டால் பாஜக அமைச்​சர்​கள் வைத்​திருக்​கும் துறை​களுக்​குள்​ளேயே மாற்​றம் செய்து கொள்​ளுங்​கள்’ என முதல்​வர் தந்​திர​மாகச் சொல்​லி​விட்​டார். அதனால் ஜான்​கு​மாருக்கு இலாகா ஒதுக்​கு​வ​தில் சிக்​கல் நீடிக்​கிறது” என்​ற​னர்.

இதுகுறித்து என்​.ஆர்​.​காங்​கிரஸ் வட்​டாரத்​தில் விசா​ரித்த போது, “இது​வரை இரண்டு முறை அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​திருக்​கி​றார் முதல்​வர் ரங்​க​சாமி. முதலில், என்​.ஆர்​.காங்​கிரஸ் அமைச்​ச​ராக இருந்த சந்​திர பிரி​யங்கா நீக்​கப்​பட்​டார். அதன் பிறகு ஐந்து மாதங்​கள் கழித்தே புதிய அமைச்​ச​ராக திரு​முரு​கன் பதவி​யேற்​றார். அவரும் இப்​படித்​தான் மாதக் கணக்​கில் இலாகா இல்​லாத அமைச்​ச​ராகவே வலம் வந்​தார். சொந்​தக் கட்​சிக்​கார​ரான திரு​முரு​க​னுக்கே 138 நாட்​கள் கழித்​துத்​தான் துறை​களை ஒதுக்​கி​னார் ரங்​க​சாமி. அப்​படிப்​பட்​ட​வர், பாஜக-வைச் சேர்ந்த ஜான்குமாருக்கு மட்​டும் கேட்​டதுமே பசை​யான துறை​களை கொடுத்து விடு​வா​ராக்​கும்” என்​ற​னர்

புது​தாக அமைச்​ச​ராக பொறுப்​பேற்ற ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்​கீடு செய்ய என்ன முயற்சி எடுத்​திருக்​கிறீர்​கள் என மாநில பாஜக தலை​வர் ராமலிங்​கத்​திடம் கேட்​டதற்​கு, "ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்​கு​வது தொடர்​பாக முதல்​வரிடம் கலந்​தாலோ​சித்து விரை​வில்​(?) அவருக்கு இலாகா ஒதுக்​கீடு செய்ய ஆவன செய்​வோம்” என்​றார்.

புதி​தாக பொறுப்​பேற்ற பாஜக அமைச்​சருக்கு எப்​போது​தான் இலாகா ஒதுக்​கு​வீர்​கள் என முதல்​வர் ரங்​க​சாமி​யிடம் கேட்​டதற்​கு, "எப்​போது வேண்​டு​மா​னாலும் ஒதுக்​கப்​படும்" என்​று, வரும்​... ஆனா, வரா​து... ஸ்டைலிலேயே சொன்​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x