Published : 17 Sep 2025 06:25 AM
Last Updated : 17 Sep 2025 06:25 AM

என்எஸ்எஸ் சிறப்பு முகாமுக்கு வழிகாட்டு விதிகள்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் நடத்​து​வதற்​கான வழி​காட்​டு​தல் விதிமுறைகளை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.

அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு தன்​னார்​வலர் பணி​களை​யும், தனித்​திறன்​களை வளர்ப்​பதுடன், சமூக வளர்ச்​சிக்​கான பங்​களிப்​புகளை அளிப்​ப​தற்​கும் நாட்டு நலப்​பணித் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. அந்​தவகை​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கான என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் நடை​பெற உள்​ளது. அதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட்​டு உள்​ளன.

அதன்​படி என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் 7 நாட்​களுக்கு நடத்​தப்பட வேண்​டும். இந்த முகாமில் பங்​கேற்​கும் மாணவர்​களின் பெற்​றோரிடம் இருந்து மறுப்​பின்மை சான்​றிதழ் பெற்ற பின்​னரே சிறப்பு முகாமில் பங்​கேற்​கச் செய்ய வேண்​டும். முகாம் அழைப்​பிதழில் இடம்​பெறும் பெயர்​கள் மற்​றும் விவரங்​கள் தமிழில்​தான் இருக்க வேண்​டும். மாணவர்​கள் தங்​கும் இடங்​களில் போதிய வசதி​கள் இருப்​ப​தோடு, முறை​யான அனு​ம​தி​யின்றி மாணவர்​களை முகாமில் இருந்து வெளியே செல்ல அனு​ம​திக்​கக் கூடாது.

இதுத​விர மதம் சார்ந்த பரப்​புரைகளை மேற்​கொள்ள எவருக்​கும் அனு​மதி அளிக்​கக் கூடாது. குறைந்​தது 1,000 மரக்​கன்​றுகள் மற்​றும் விதைகள் நட வேண்​டும். உயர்​கல்வி வழி​காட்​டும் நிகழ்​வு, மண் பாது​காப்​பு, மழை நீர் சேகரிப்​பு, போதைப்​பொருள் தடுப்பு சார்ந்த விழிப்​புணர்வு உள்​ளிட்ட செயல்​பாடு​களை சிறப்பு முகாமில் மேற்​கொள்ள வேண்​டும் என்பன உட்பட பல்​வேறு அம்​சங்​கள் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்​றுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x