Published : 17 Sep 2025 06:18 AM
Last Updated : 17 Sep 2025 06:18 AM

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 13-ம் ஆண்டு தொடக்கம்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், செல்வப்பெருந்தகை, அன்புமணி

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-வது ஆண்டு தொடக்​கத்​தையொட்டி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: தமிழ்ப் பத்​திரி​கை​யுல​கில் புதுப்​போக்கை உரு​வாக்​கிடும் வகை​யில் பாரம்​பரி​யம் மிக்க ‘தி இந்​து’ குழு​மத்​தால் தொடங்கப்​பட்ட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 12 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 13-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது.

ஆங்​கில நாளேடு​களில் வெளிவரும் தரமான கட்​டுரைகளின் தமிழாக்​கம், சிறு​வர், மகளிர் உள்ளிட்​டோருக்கு ஊக்​கமளிக்​கும் சிறப்​புப் பக்​கங்​கள், பல்​வேறு துறை சார்ந்த வல்​லுநர்​களின் ஆழ்ந்த கருத்​துகளை வெளிப்​படுத்​திடும் கருத்​துப் பேழை, உள்​ளூர் நடப்​பு​களை அங்​குலம் அங்​குல​மாக அளந்​திடும் ஊர்​வலம், சிறந்த நூல் அறி​முகங்​கள், இலக்​கிய ஆர்​வலர்​களை மகிழ்​வித்​திடும் பகு​தி​கள் என அனைத்​தும் அடங்​கிய பெட்​டக​மாக ‘இந்து தமிழ் திசை’ வெளி​யாகி வரு​கிறது.

நம்​பகத்​தன்மை மிக்க செய்​தி​களுக்​கான நாளே​டான ‘இந்து தமிழ் திசை’ கடந்த 12 ஆண்​டு​களில் பல்​வேறு பிரி​வினருக்​கும் வழி​காட்​டும் நிகழ்ச்​சிகளை​யும் தமிழகமெங்​கும் நடத்​திவரு​வது பாராட்​டக்​குரியது.

திரா​விட மாடல் அரசின் சிறந்த திட்​டங்​களைப் பாராட்​டி, பல தலை​யங்​கங்​களை தீட்​டி, திட்​டங்​கள் குறித்து மக்​களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்​படுத்தி வரு​கிறது. இவற்​றுக்கு எல்​லாம் மகுடம் வைத்​தாற்​போல, முத்​தமிழறிஞர் கலைஞர் குறித்த ‘தெற்​கி​லிருந்து ஒரு சூரியன்’, பேரறிஞர் அண்​ணா​வின் பன்​முகப் பரி​மாணத்தை வெளிப்​படுத்​தும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, தந்தை பெரி​யாரை அனைத்து இல்​லங்களுக்​கும் கொண்டு சேர்க்​கும் ‘தமிழர் தலை​வர்’ ஆகிய சிறப்பு நூல்​களை​யும் தங்​களது பதிப்​பகம் வாயி​லாக வெளி​யிட்​டு, தமிழ் மக்​களின் நெஞ்​சில் தனி இடம் பிடித்​துள்​ளது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்.

எனக்கு அன்​பளிப்​பாக வழங்​கப்​படும் நூல்​களில் பெரும்​பான்​மை​யான நூல்​கள் ‘இந்த தமிழ் திசை’ பதிப்​பகம் வெளி​யிட்ட நூல்​கள்​தான். எத்​தனை ஊடகங்​கள் வந்​தா​லும் அச்சு ஊடகம் வழங்​கும் தெளிந்த, ஆழ்ந்த, விரிந்த செய்​திக்​கான தேவை இருப்​பதை உறுதி செய்​யும் வகை​யில் ‘இந்து தமிழ் திசை’ திகழ வாழ்த்​துகிறேன்.

‘இந்து தமிழ் திசை’​யின் இந்த வெற்​றிப் பயணத்​தில் துணைநிற்​கும் ஆசிரியர் குழு​வினர், செய்​தி​யாளர்​கள், புகைப்​படக் கலைஞர்​கள், வடிவ​மைப்​பாளர்​கள், விநி​யோகஸ்​தர்​கள் உள்​ளிட்ட அனைத்​துப் பணி​யாளர்​களுக்​கும் எனது பாராட்​டு​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: மக்​களாட்சி விழு​மி​யங்​களைப் பாது​காக்க வேண்​டிய கடமை பத்​திரி​கைகளுக்​கும் உள்​ள​தால்​தான், அவற்றை நான்​காவது தூணாகக் கருதுகிறோம். அவ்​வகை​யில், 12 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 13-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடுநிலை​யோடு உண்மை செய்​தி​களை மக்​களுக்கு அளித்​து, சமூக முன்​னேற்​றத்​துக்​கான தனது அரும்​பணி​யைத் தொடர அதி​முக சார்​பில் இதயப்​பூர்​வ​மான நல் வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். `இந்து தமிழ் திசை' நாளிதழ் தரணி​யெங்​கும் சிறக்க வேண்​டும்.

தமிழக காங்​கிரஸ்​ தலை​வர்​ கு.செல்​வப்​பெருந்​தகை: வெற்றிகரமாக 12-வது ஆண்டை நிறைவு செய்து, 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கும், அதன் ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 13-வது ஆண்டு மட்டுமல்ல, 113-வது ஆண்டிலும் ‘இந்து தமிழ் திசை’ ஜொலிக்க வாழ்த்துகிறேன்.

சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், உள்ளூர், மாநிலம், தேசியம், உலக செய்திகள் என அனைத்து செய்திகளையும் நடுநிலை தவறாமலும் வழங்கி வரும் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டை மனதார வாழ்த்துகிறேன்.

பாமக தலை​வர் அன்​புமணி: ‘தி இந்​து’ குழு​மத்​தில் இருந்து வெளிவரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 12 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 13-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. இத்​தருணத்​தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நிர்​வாகத்​தினர், ஆசிரியர் குழு​வினர் உள்​ளிட்ட அனைத்​துப் பிரி​வினருக்​கும் எனது வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்​தி​கள் மட்​டுமின்​றி, செய்​திக் கட்​டுரைகள், அரசி​யல் ஆய்​வு​கள், இலக்​கியச் செய்​தி​கள், நூல் மதிப்​பாய்​வு​கள் உள்ளிட்டவை​யும் வெளிவரு​வது கூடு​தல் சிறப்​பாகும். தமிழ் ஊடக உலகின் தனிச்​சிறப்பு மிக்க ஊடகங்​களில் ஒன்​றான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தரணி​யெங்​கும் சிறக்​க வாழ்த்​துகிறேன்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x