Published : 17 Sep 2025 06:02 AM
Last Updated : 17 Sep 2025 06:02 AM

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இளைஞருக்கு தொடர்பு? - என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

நாகர்கோவில்: தடை செய்​யப்​பட்ட அமைப்​பு​களு​டன் நாகர்​கோ​வில் இளைஞருக்கு தொடர்பு இருப்​ப​தாக கிடைத்த தகவலின்​பேரில், அவரது பெற்​றோரிடம் என்ஐஏ அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர். ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் தடை செய்​யப்​பட்ட அமைப்​புக்கு ஆதர​வாக செயல்​பட்​ட​தாக சிலரை என்ஐஏ (தேசிய புல​னாய்வு முகமை) அதி​காரி​கள் சில நாட்​களுக்கு முன்பு கைது செய்​தனர்.

இவர்​களு​டன் தொடர்​பில் இருந்​தவர்​களை கண்​டறிய அவர்​களது செல்​போன்​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன. அப்​போது, கைதான ஒரு​வருடன் நாகர்​கோ​வில் வட்​ட​விளை​யைச் சேர்ந்த ரஷித் அகமது என்​பவரின் மகன் ஹூசன் உசைன் (28) என்​பவர் சமூக வலை​தளம் மூலம் தொடர்​பில் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

அவரிடம் விசா​ரணை நடத்​து​வதற்​காக டெல்​லி, ஆந்​திரா மற்​றும் சென்​னை​யில் இருந்து 6 பேர் அடங்​கிய என்ஐஏ அதி​காரி​கள் குழு​வினர் நேற்று அதி​காலை வட்​ட​விளை​யில் உள்ள ஹூசன் உசைன் வீட்​டுக்கு வந்​தனர். அப்​போது அங்கு உசைன் இல்​லை. அவரது பெற்​றோர் மட்​டும் வீட்​டில் இருந்​தனர்.

உசைன் குறித்து அவர்​களிடம் விசா​ரித்​த​போது, தங்​களது மகன் வேலை விஷய​மாக சென்​னைக்கு சென்​றிருப்​ப​தாக அவர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்​து, உசைன் வீட்​டில் காலை 6 மணிக்கு என்ஐஏ அதி​காரி​கள் சோதனையை தொடங்​கினர்.

சுமார் மூன்​றரை மணி நேரம் நடை​பெற்ற சோதனைக்​குப் பின்​னர், உசைனை விசாகப்​பட்​டினம் அலு​வல​கத்​துக்கு விசா​ரணைக்கு அழைத்து வரு​மாறு அவரது பெற்​றோரிடம் கூறிய என்ஐஏ அதி​காரி​கள், அது தொடர்​பாக சம்​மன் கொடுத்து விட்டு சென்​றனர். என்ஐஏ சோதனையை தொடர்ந்து உசைனின் வீட்​டின் முன்பு பலத்த போலீஸ் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x