Published : 17 Sep 2025 05:49 AM
Last Updated : 17 Sep 2025 05:49 AM

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநில மாநாடு

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்​றக்​கோரி தமிழ்​நாடு சத்​துணவு மற்​றும் அங்​கன்​வாடி பணி​யாளர் சங்​கங்​கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்​பரில் நடைபெற உள்ளது.

இதுதொடர்​பாக மாநில ஒருங்​கிணைப்​பாளர் மு.வரத​ராஜன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக சத்​துணவு திட்​டத்​தில் இன்​றைக்கு ஏறத்​தாழ 85 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​ப​டா​மல் உள்​ளன. அதே​போல் சத்​துணவு ஊழியர்களுக்கு குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​ய​மாக ரூ.7,850 வழங்க வேண்​டும் என உச்​ச நீ​தி​மன்​றம் தீர்ப்பு அளித்தும் தமிழக அரசு இது​வரை அமல்​படுத்​த இல்​லை.

தமிழகத்​தில் தாய் சங்​கங்​கள் என்று கூறப்​படும் ஜாக்​டோ-ஜியோ, தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் சங்​கம், தமிழ்​நாடு அரசு பணி​யாளர் சங்​கம், தமிழ்​நாடு அரசு அலு​வலக ஒன்​றி​யம், சிஎன்டி அலு​வலர் கழகம் போன்ற சில அமைப்​பு​கள் 35 ஆண்​டு​களாகசத்​துணவு, அங்​கன்​வாடி ஊழியர்​களின் உழைப்பை சுரண்டி வரு​கின்​றன.

எங்​களது கோரிக்​கைகள் தொடர்​பாக வாய் திறப்​பதே இல்​லை. உச்​ச நீ​தி​மன்ற தீர்ப்பை அமல்​படுத்​தி, மருத்​துவக் காப்​பீடு, அகவிலைப்​படி​யுடன் ஓய்​வூ​தி​யத்தை குடும்ப ஓய்​வூ​தி​ய​மாக மாற்றி வழங்​க வேண்​டும் என்​பதே எங்​களது கோரிக்​கை.

இதை வலி​யுறுத்தி தமிழ்​நாடு சத்​துணவு மற்​றும் அங்​கன்​வாடி பணி​யாளர் சங்​கங்​களின் மாநில மாநாட்டை சென்​னை​யில் வரும் நவம்​பர் மாதம் நடத்​தவுள்​ளோம். இந்த மாநாட்​டில் பங்​கேற்க முதல்வருக்​கும், துணை முதல்​வருக்​கும் அழைப்பு கொடுத்​துள்​ளோம்.

தமிழகத்​தில் மொத்​த​மாக 2.5 லட்​சம் சத்​துணவு ஊழியர்​கள் உள்​ளனர். ஒரு குடும்​பத்​துக்கு 4 முதல் 5 ஓட்​டுக்​கள் என்​றாலும் 10 லட்​சம் ஓட்​டுக்​கள் வரும். ஆனால் எந்​தவொரு அரசி​யல் கட்சி பின்​னாலும் நாங்​கள் செல்ல தயா​ராக இல்​லை.

அதே​நேரம் தேர்​தல் வாக்​குறு​தி​கள் நிறைவேற்​றப்​ப​டாத பட்​சத்​தில் ஜனவரி மாதம் முதல் வாரத்​தில் கூடி முடி​வெடுத்​து, 2026 தேர்​தலில் யாருக்கு வாக்களிப்போம் என்​பதை தெளிவுபடுத்​து​வோம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x