Published : 17 Sep 2025 05:15 AM
Last Updated : 17 Sep 2025 05:15 AM

தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: தமிழகத்​தில் வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்​கையை 74 ஆயிர​மாக உயர்த்த தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது. தமிழகத்​தில் கடந்த 2024 மக்​கள​வைத் தேர்​தலின்​போது 68 ஆயிரம் வாக்​குச்​சாவடிகள் இருந்​தன.

இந்​நிலை​யில், ஒரு வாக்​குச்​சாவடி​யில் 1,200 வாக்​காளர்​களுக்கு மேல் இருக்​கக் கூடாது என்று இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. அதன்​படி, தமிழகத்​தில் வாக்​குச்​சாவடிகள் மறு சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, அதன் விவரங்​கள் அந்த மாவட்ட ஆட்​சி​யர்​களிடம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

உத்​தேச வாக்​குச்​சாவடி பட்​டியல் தொடர்​பாக இம்​மாத இறு​திக்​குள் அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களு​டன் மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள் ஆலோ​சனை நடத்​தி, அவர்​களின் கருத்​துகளைப் பெற்று வாக்​குச்​சாவடி பட்​டியலை இறுதி செய்ய வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

பின்​னர் மாவட்ட வாரி​யாக வாக்​குச்​சாவடிகள் பட்​டியல்​கள், மாவட்ட தேர்​தல் அலு​வலர்​களால் வெளி​யிடப்பட உள்​ளது. அதன், பின்​னர் புதிய வாக்​குச்​சாவடிகள் பட்​டியலை தேர்​தல் ஆணை​யத்​துக்​கு, தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அனுப்பி வைக்க உள்​ளார்.

இந்த நடவடிக்​கை​யின் மூலம் தமிழகத்​தில் புதி​தாக 6 ஆயிரம் வாக்​குச்​சாவடிகள் உரு​வாகி, மொத்த வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 68 ஆயிரத்​தில் இருந்து 74 ஆயிர​மாக உயர வாய்ப்​புள்​ளது என தேர்​தல் ஆணைய வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன..

தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக், அனைத்து மாவட்ட தேர்​தல் அலு​வலர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில், “வாக்​குச்​சாவடிஅலு​வலர்​களாக மத்​திய, மாநில அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​கள் ஆகியோரை நியமனம் செய்து உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், அவர்​கள் அந்த பணிக்கு வர இயலாத நிலை ஏற்​பட்​டால் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களாக தேர்​தல் பணி​யில் அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், கிராம உதவி​யாளர்​கள், தேசிய நகர்ப்​புற வாழ்​வா​தார திட்​டப் பணி​யாளர்​களை பயன்​படுத்​திக்​கொள்​ளலாம்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. முந்​தைய தேர்​தல்​களில் தேர்​தல் பணி​யில் வாக்​குச்​சாவடி அலுவலர்களாக அரசு ஊழியர், ஆசிரியர்​கள் மட்​டும் நியமிக்கப்பட்டு வந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x