Published : 16 Sep 2025 06:24 AM
Last Updated : 16 Sep 2025 06:24 AM

திமுகவுடன் அனுசரணையாக செயல்படுங்கள்: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ அறிவுறுத்தல்

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி, திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில் பேசிய பொதுச் செயலாளர் வைகோ. உடன், முதன்மைச் செயலாளர் துரை.வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள். | படம்: ர.செல்வமுத்துகுமார் |

திருச்சி: கட்​சி​யின் கட்​டமைப்பை மேலும் வலுப்​படுத்த திமுக​வுடன் அனுசரணையாக செயல்​படுங்​கள் என மதி​முக மாநில மாநாட்​டில் அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ தொண்​டர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

அண்​ணா​வின் 117-வது பிறந்​த​ நாளை​யொட்டி திருச்சி சிறுக​னூரில் மதி​முக மாநில மாநாடு நேற்று நடை​பெற்​றது. மதி​முக ஆட்​சிமன்​றக் குழுச் செய​லா​ளர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்​தார். மாநில துணைப் பொதுச்​செய​லா​ளர் டாக்​டர் ரொஹையா ஷேக் முகமது கட்​சிக் கொடியேற்றி வைத்​தார்.

கூட்​டத்​தில், முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி. பேசி​யது: அண்​ணா​வின் பிறந்​த ​நாளை எழுச்​சிமிகு மாநா​டாக நடத்​தும் ஒரே இயக்​கம் மதி​முக மட்​டும் தான். இந்த இயக்​கத்தை அழித்​து​விடலாம், பிளவுபடுத்​தலாம் என 32 ஆண்​டாக சிலர் முயற்​சித்​தனர். எப்​போதும் அது முடி​யாது. அண்ணா கண்ட வளமான தமிழகம் அமை​யும் வரை மதி​முக வீழாது என்​றார்.

தொடர்ந்​து, பொதுச்​செய​லா​ளர் வைகோ பேசி​யது: மனிதர்​கள் வரு​வார்​கள், சிலர் போவார்​கள், வெகு சிலர் வில​கிப்​போ​வார்​கள். உங்​களை​யும், என்​னை​யும் எந்த சக்​தி​யாலும் பிரிக்க முடி​யாது. மதி​முக​வுக்கு பல சோதனை​கள் வந்​தா​லும் அதை கடந்து வந்துள்ளோம்.

இந்​தி​யா​வின் பன்​முகத் தன்​மையை உடைத்து ஒரே மொழி, ஒரே கலாச்​சா​ரம், ஒரே பண்​பாடு, ஒரே நாடு என ஆர்​எஸ்​எஸ், இந்துத்துவா சக்​தி​கள் பிரகடனம் செய்​துள்​ளன. அதை ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம். நமது கட்சி அமைப்பை வலுப்​படுத்த நமக்கு நேச​மான திமுக​வினருடன் அனுசரணையை மேற்​கொள்​ளுங்​கள். முதல்​வர் ஸ்டா​லின் சொல்​லாத, சொன்ன வாக்​குறு​தி​களை நிறைவேற்​றி​விட்​டார். சில வாக்​குறு​தி​களை மத்​திய அரசின் தடைசுவர்​களால் நிறைவேற்ற முடிய​வில்​லை.

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்த​லிலும் திமுக கூட்​டணி தான் அபரிமித​மான வெற்​றியை பெறும். திமுக தனிப்​பெரும்​பான்​மையை பெறும். மீண்​டும் ஸ்டா​லின் மகுடம் ஏந்​து​வார். இவ்​வாறு அவர் பேசி​னார். கூட்​டத்​தில், அவைத் தலை​வர் ஆடிட்​டர் ஆ.அர்​ஜூன​ராஜ், பொருளாளர் மு.செந்​தில​திபன், துணைப் பொதுச் செய​லா​ளர்​கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடு​துறை இரா.​முரு​கன், தி.​மு.​ராசேந்​திரன் உள்​ளிட்​டோர் சிறப்​புரை​யாற்​றினர். பெரம்​பலூர் மாவட்​டச் செய​லா​ளர் எஸ்​.ஜெயசீலன் நன்றி கூறி​னார்.

மாநாட்​டில், வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​டணி வெற்றி பெற மதி​முக பணி​யாற்​றும். ஜிஎஸ்டி வரி மாற்றி அமைத்​த​தால் தமிழகத்​துக்கு ஏற்​படும் வரி இழப்பை மத்​திய அரசு ஈடுகட்ட வேண்​டும். தமிழ் ஈழம் அமைய பொது​வாக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என்பன உள்​ளிட்ட 12 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x