Published : 15 Sep 2025 06:23 AM
Last Updated : 15 Sep 2025 06:23 AM

ரயில்கள் மீது கல் எறிபவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை: தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: ர​யில்​களின் மீது கல் எறிபவர்​களுக்கு ரயில்வே சட்​டத்​தின் கீழ் ஆயுள் சிறைத் தண்​டனை அல்​லது 10 ஆண்டு சிறைத் தண்​டனை கிடைக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெற்கு ரயில்வே நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

தெற்கு ரயில்​வே​யில் பல்​வேறு வழித்​தடங்​களில் விரைவு, பாசஞ்​சர் ரயில் மற்​றும் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. சில
ரயில்​களின் மீது கற்​களை வீசும் சம்​பவங்​கள் அவ்​வப்​போது நடை​பெறுகின்​றன. கற்​களை வீசுபவர்​கள் மீது ரயில்வே சட்​டத்​தின் கீழ், ஆர்​பிஎஃப் போலீ​ஸார் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில் மீது கல் வீசுபவர்​கள் மீது ரயில்வே துறை கடுமை​யான நடவடிக்கைகளை எடுத்து வரு​கிறது. ரயில்​வேக்கு ஏற்​பட்ட சேதத்​துக்கு சமமான தொகை கல்​வீசிய குற்​ற​வாளி​களுக்கு அபராத​மாக விதிக்​கப்​படும். கண்​ணூர் எக்​சிகியூட்​டிவ் விரைவு ரயில் மீது கடந்த மாதம் 30-ம் தேதி நடந்த கல் வீச்சுசம்​பவம் தொடர்​பாக எர்​ணாகுளம் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் 2 பேரை கைது செய்​தனர்.

இதுத​விர சில இடங்​களில் இது​போன்ற சம்​பவங்​கள் நடை​பெற்​றுள்​ளன. இது​போன்ற சட்​ட​விரோத மற்​றும் ஆபத்​தான செயலுக்கு கடுமை​யான தண்​டனை வழங்​கும் வகை​யில், விரை​வான நடவடிக்கை எடுக்​கப்​படும். பயணி​கள், ரயில்வே பணி​யாளர்​கள் மற்​றும் ரயில் நடவடிக்​கை​களின் பாது​காப்​புக்கு கடுமை​யான அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​து​வ​தால், இது​போன்ற நாச வேலைகளை இந்​திய ரயில்வே மிக​வும் தீவிர​மாக கருதுகிறது.

இது​போன்ற குற்​றச்​செயல்​களில் ஈடு​படு​வது ரயில்வே சட்​டத்​தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடி​யாத குற்​ற​மாகும். குற்​றச் செயல்​களில் ஈடு​படு​பவர்​களின் எதிர்​கால வேலை வாய்ப்பு மோச​மாக பாதிக்​கலாம். தீங்கு செய்​யும் வகை​யில், ரயிலை சேதப்​படுத்​துதல் அல்​லது சேதப்​படுத்த முயற்​சித்​தல், ரயில் தண்​ட​வாளத்​தின் மீது கற்​கள் அல்​லது பிற பொருட்​களை வீசுதல், தண்​ட​வாளங்​கள் இயந்​திரங்​கள் போன்​றவற்றை சேதப்​படுத்​துதல், ரயில்​வே​யில் உள்ள நபர்​களின் பாது​காப்​புக்கு ஆபத்து ஏற்​படுத்​தும் நோக்​கத்​துடன் செயல்​படு​பவர்​களுக்கு ஆயுள் தண்​டனை அல்​லது 10 ஆண்​டு​கள் வரை கடுமை​யான சிறைத் தண்​டனை​யும், முதல்​முறை குற்​றம்​புரிந்​தவ​ராக இருந்​தால் குறைந்​த​பட்​சம் 3 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை​யும், அடுத்த முறை செய்​தால் குறைந்​த​பட்​சம் 7 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை வழங்​க​வும் ரயில்வே சட்​டத்​தில் வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x