Published : 13 Sep 2025 05:30 AM
Last Updated : 13 Sep 2025 05:30 AM

சென்னையில் 16-ம் தேதி தமிழக பாஜக தலைவர்கள் முக்கிய ஆலோசனை

சென்னை: சென்​னை​யில் பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​. சந்​தோஷ் தலை​மை​யில் செப்​.16-ல் முக்​கிய ஆலோ​சனை நடக்க​வுள்​ள​தாக அறிக்​கப்​பட்​டுள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து ஓபிஎஸ், தினகரன் வெளி​யேறிய நிலை​யில், அவர்களை மீண்​டும் கூட்​ட​ணி​யில் இணைக்க பாஜக முயற்​சித்து வரு​கிறது.

அதே​போல், ஒருங்​கிணைந்த அதிமுக வேண்​டும் என செங்​கோட்​டையன் போர்​கொடி தூக்​கி​யிருப்​பது கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஓரிரு நாட்​களுக்கு முன்பு அமித் ஷாவை சந்​தித்த செங்​கோட்​டையன் இதே கருத்தை வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதையடுத்​து, கூட்​டணியில் உள்ள பிரச்​சினை​கள் குறித்து நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​களை அழைத்து தேசிய தலை​வர்​கள் ஆலோ​சித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், சட்​டப்​பேரவை தேர்​தல், கூட்​டணி விவ​காரம் குறித்து சென்​னை​யில் பாஜக தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்​சி​யின் தலை​வர்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

அதன்​படி ‘சிந்​தன் பைதக்’ எனப்​படும் ‘சிந்​தனை ஆய்​வுக் கூட்​டம்’ செப்​.16-ம் தேதி நடக்​கிறது. இதற்கு பாஜக தேசிய பொதுச் செயலா​ளர் பி.எல்​.சந்​தோஷ் தலைமை தாங்​கு​கிறார். இதில், நயி​னார் நாகேந்​திரன், அண்​ணா​மலை, எல்​.​முரு​கன், வான​தி, தமிழிசை, ஹெச்​.​ராஜா, பொன்​.​ரா​தாகிருஷ்ணன், மாநில துணை தலை​வர்​கள், பொதுச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்டோர் பங்​கேற்​கின்றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x