Last Updated : 12 Sep, 2025 08:57 AM

 

Published : 12 Sep 2025 08:57 AM
Last Updated : 12 Sep 2025 08:57 AM

அன்று அண்ணாமலை… இன்று நயினார் நாகேந்திரன்..! - பழனிசாமி ‘ஸ்டைலில்' பழிபோடும் தினகரன்!

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக முன்னோடிகளை எசகுபிசகாக விமர்சனம் செய்த அப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வெகுண்டெழுந்தது அதிமுக. அதையே சாக்காகச் சொல்லி கூட்டணியை விட்டு விலகி சூடும்பட்டது அதிமுக. அதேபோல் இப்போது பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்டிஏ கூட்டணியை விட்டு விலகி இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

“அண்​ணா​மலை தான் என்னை என்​டிஏ கூட்​ட​ணி​யில் சேர்த்​தார். அவர் எங்​களுக்கு உரிய மரி​யாதை கொடுத்​தார். ஆனால், அவருக்கு இருக்​கும் பக்​கு​வம் நயி​னார் நாகேந்​திரனுக்கு இல்​லை. இபிஎஸ் மட்​டும் இருந்​தால் போதும் என நினைக்​கும் நயி​னாருக்கு தமி​ழ​கத்​தின் யதார்த்த நிலை தெரிய​வில்​லை. நாங்​கள் என்​டிஏ கூட்​ட​ணியை விட்டு வில​கக் காரணம் நயி​னார் நாகேந்​திரன் தான். அண்​ணா​மலை தலை​வ​ராக இருந்​திருந்​தால் இது நடந்​திருக்​காது” என்று பொட்​டிலடித்​தாற்​போல் சொல்​லி​விட்​டார் தினகரன்.

மக்​கள​வைத் தேர்​தலில் அண்​ணா​மலை​யால் கூட்​ட​ணியை முறித்​துக் கொண்ட அதி​முக, அண்​ணா​மலையை நீக்க பாஜக தலைமை ஒத்​துக் கொண்​டதை அடுத்து மீண்​டும் பாஜக கூட்​ட​ணிக்கு தலை​யாட்​டியது. அதி​முக-வை வைத்​துக் கொண்டு தமி​ழ​கத்​தில் கூட்​டணி ஆட்​சியை அமைத்து​விட வேண்​டும் என்​பதில் குறி​யாக இருக்​கும் பாஜக தலை​மை, இன்​னொரு முறை அதி​முக-வை கைநழுவ விட தயா​ராய் இல்​லை. அதனால் தான், கூட்​ட​ணியை விட்டு வில​கு​கிறேன் என தர்​ம​யுத்த நாயகன் ஓபிஎஸ் சொன்​ன​போது அவரை நிறுத்​திவைப்​ப​தற்​கான எந்த முயற்​சி​யை​யும் அதி​காரபூர்​வ​மாக எடுக்​காமல் மவுனம் காத்​தது.

அதேசம​யம், தமி​ழ​கம் வந்த மோடியை சந்​திக்க ஓபிஎஸ் எடுத்த முயற்​சிகளை நயி​னார் உதாசீனப்​படுத்​திய விவ​கார​மானது தினகரனை ரொம்​பவே யோசிக்க வைத்​து​விட்​டது. அப்​போதே இதுகுறித்து ரியாக்ட் செய்​திருந்த அவர், “பழனி​சாமிக்கு பயந்து கொண்டு நாளைக்கே நம்​மை​யும் பாஜக-​வினர் இப்​படி உதாசீனம் செய்​ய​மாட்​டார்​கள் என்​பது என்ன நிச்​ச​யம்?” என்று தனது ஆதர​வாளர்​கள் மத்​தி​யில் ஆதங்​கப்​பட்​டிருக்​கி​றார்.

தினகரன் யூகித்​த​படியே ஜி.கே.மூப்​ப​னார் நினை​வேந்​தல் நிகழ்ச்​சி​யில் அந்த கசப்​பான அனுபவ​மும் அவருக்கு ஏற்​பட்​டு​விட்​டது. இந்த நிகழ்ச்சியில் தினகரன் உள்​ளிட்ட என்​டிஏ கூட்​ட​ணிக் கட்சி தலை​வர்​களை ஒரே மேடை​யில் உட்​கார​வைத்​து​விட வேண்​டும் என பிர​யாசைப்​பட்ட ஜி.கே.​வாசன், தினகரனை​யும் இந்த நிகழ்​வுக்கு அழைத்​திருந்​த​தாகச் சொல்​கி​றார்​கள்.

ஆனால், தினகரன் வந்​தால் தன்​னால் அந்த நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்ள முடி​யாது என இபிஎஸ் பிரேக் போட்​டிருக்​கி​றார். இதனால் தர்​மசங்​கடப்​பட்​டுப் போன வாசன், விஷ​யத்தை தினகரனுக்கு பக்​கு​வ மாக எடுத்​துச் சொல்லி இருக்​கி​றார். இதனால், நிகழ்​வில் தினகரன் கலந்​து​கொள்​ள​வில்​லை. அதேசம​யம், இந்த நிகழ்​வில் அண்​ணா​மலை​யை​யும் இபிஎஸ்​ஸை​யும் அடுத்​தடுத்த இருக்​கை​யில் அமர​வைத்து இரு​வ​ருக்​கும் இடையி​லான இறுக்​கத்​தைக் குறைத்​தார் வாசன்

இந்த நிலை​யில் தான், “நயி​னார் நாகேந்​திரனுக்கு கூட்​ட​ணிக் கட்​சிகளை அரவணைக்​கத் தெரிய​வில்​லை” என்று குற்​றம்​சாட்டி இருக்​கும் தினகரன், “பழனி​சாமி இல்​லாமல் வெறொரு​வரை முதல்​வர் வேட்​பாள​ராக அறி​வித்​தால் மட்​டுமே என்​டிஏ கூட்​ட​ணியை நாங்​கள் ஆதரிப்​போம்” என அடுத்த குண்​டை​யும் எடுத்து வீசி இருக்​கி​றார்.

இதுபற்றி அதி​முக தரப்​பிலிருந்து நம்​மிடம் பேசி​ய​வர்​கள், “ஓபிஎஸ், டிடிவி இரு​வ​ரும் கூட்​ட​ணிக்​குள் இருந்​தால் தான் தென் மாவட்​டங்​களில் என்டிஏ கூட்​ட​ணிக்கு பலம் என்று ஒரு மாயத் தோற்​றத்தை உரு​வாக்​கியதே அண்​ணா​மலை தான். ஆனால், நயி​னார் நாகேந்​திரனை மாநில தலைவராக்​கு​வதன் மூலம் அதை ஈடு செய்​து​கொள்ள முடி​யும் என நினைத்​தது பாஜக தலை​மை. அதை பொய்​யாக்க சிலர் இப்​போது மெனக்கிடுகிறார்கள். அவர்​களின் சதி ஆலோ​சனைப்​படியே ஓபிஎஸ்​ஸும், தினகரனும் கூட்​ட​ணியை விட்டு விலகி இருக்​கி​றார்​கள். இவர்​கள் இருவ​ருமே நயி​னார் மீது பழி​போட்​டிருப்​ப​தைப் பார்த்​தாலே உள் விவ​காரம் என்​ன​வாக இருக்​கும் என்று யாருக்​கும் புரி​யும்” என்​ற​னர்.

பாஜக தரப்​பில் பேசி​ய​வர்​களோ, “அதி​முக உடன் கூட்​டணி மீண்​டும் உறு​தி​யான போதே பழனி​சாமி தமைமை​யில் என்​டிஏ கூட்​டணி ஆட்சி அமைக்​கும் என அமித் ஷா தெள்​ளத் தெளி​வாக சொல்​லி​விட்​டார். அதைக் கேட்​டுக் கொண்டு அப்​போது சும்மா இருந்த தினகரன், இப்​போது மூப்பனார் நினை​வேந்​தல் நிகழ்ச்​சிக்​குப் பிறகு, ‘பழனி​சாமியை முதல்​வர் வேட்​பாள​ராக ஏற்​க​மாட்​டோம்’ என திடீர் பல்டி அடித்​திருக்​கி​றார். அந்த நிகழ்ச்​சிக்கு தினகரன் வரு​வ​தாக இருந்​தால் நான் வரமுடி​யாது என பழனி​சாமி சொல்லி இருக்​கி​றார். அதில் தான் தினகரனுக்கு ஈகோ.

அது​மட்​டுமல்​லாது, தவெக தரப்​பிலும் தினகரனும் ஓபிஎஸ்​ஸும் பேச்​சு​வார்த்தை நடத்த ஆரம்​பித்​து​விட்​டார்​கள். இந்​தக் கணக்​கெல்​லாம் இருப்பதால் தான் ‘பழனி​சாமியை முதல்​வர் வேட்​பாள​ராக ஏற்​க​மாட்​டோம்’ என போகாத ஊருக்கு வழி தேடு​கி​றார் தினகரன். ஆனால் ஒன்​று... முறுக்​கிக் கொண்டு நின்ற பழனி​சாமியையே வழிக்​குக் கொண்டு வந்​தவர் அமிஷ் ஷா. ஒரு​வேளை, தினகரனும் ஓபிஎஸ்​ஸும் கட்​டா​யம் இந்​தக் கூட்​ட​ணிக்கு தேவை என கரு​தி​னால் அவர்​களை​யும் வளைத்​துக் கொண்டு வரும் ‘வித்​தை​யும்’ அமித் ஷாவுக்கு தெரி​யும்” என்று சிரிக்​கிறார்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x