Published : 12 Sep 2025 06:01 AM
Last Updated : 12 Sep 2025 06:01 AM

கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கடலூர் உள்​ளிட்ட 4 மாவட்​டங்​களில் இன்று (செப்​.12) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடி​சா-வடக்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதனால் தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும்.

மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், கடலூர், விழுப்​புரம் மாவட்​டங்​களில் இன்று ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய, மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக மதுரை மாநகரில் 13 செ.மீ. தல்​லாகுளம், கரூர் மாவட்​டம் பஞ்​சப்​பட்​டி​யில் 12 செ.மீ. திருச்சி மாவட்​டம் துறையூர், கரூர் மாவட்​டம் கடவூரில் 9 செ.மீ. திருச்சி மாவட்​டம் புள்​ளம்​பாடி, பொன்​மலை, மதுரை மாவட்​டம் புலிப்​பட்​டி, பெரியபட்​டி​யில் 8 செ.மீ. பெரம்​பலூரில் 7 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்டு​ உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x