Published : 12 Sep 2025 05:51 AM
Last Updated : 12 Sep 2025 05:51 AM

அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: திருமாவளவன் கருத்து

சென்னை: ‘அதி​முக​வால் சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்லை’ என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரிவித்​துள்​ளார்.

சென்​னை​யில் உள்ள விசிக தலை​மையகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுற்​றுப் பயணம் செல்​வ​தில் விசிக​வுக்கு அவசரம் எதுவும் இல்​லை. கட்​சி​யின் கட்டமைப்பை மறுசீரமைப்​ப​தில் கவனம் செலுத்தி வரு​கிறோம். அந்​தப் பணி​கள் முடிவடைந்த பிறகு, சுற்​றுப் பயணம் செல்​வது குறித்து முன்​னணி நிர்​வாகி​களு​டன் கலந்து பேசி முடி​வெடுப்​போம்.

முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் வில​கியதன் மூலம் அதி​முக சுதந்​திர​மாக செயல்​பட​வில்லை என்​பது தெரி​கிறது. அதி​முக மீது எந்த காழ்ப்பும் விசிக​வுக்கு இல்​லை. அரசி​யல் உள்​நோக்​கத்​தோடு இதை சொல்​ல​வில்​லை. அதி​முக​வில் நில​வும் குழப்​பத்​துக்கு பாஜக தான் காரணம் என்​பதை மக்​கள் அறி​வார்​கள்.

பிரச்சினைகளுக்கு பாஜக காரணம்: வி.கே.சசிகலா செயல்பட முடி​யாத அளவுக்கு முடக்​கப்​பட்​டார். முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தனிமைப்​பட்டு நிற்​கிறார். டிடிவி தினகரன் தனிக்​கட்சி தொடங்கி தனித்து இயங்​கு​கிறார். அதி​முக தலை​மைக்கு எதி​ராக பேசும் அளவுக்கு செங்​கோட்​டையன் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளார். இவை அனைத்​துக்​கும் பாஜக காரணம் என்​பதே ஒரே பதில்.

பாஜக​வின் தலை​யீடு​களால் தான் அதி​முக இந்த நிலையை எட்​டி​யிருக்​கிறது. இதை முன்​னணி தலை​வர்​கள் புரிந்து கொண்​டால் முன்​னெச்​சரிக்​கை​யான சில முடிவு​களை எடுக்க முடி​யும். அதி​முகவை அவர்​களால் காப்​பாற்ற முடி​யும் என நம்​பு​கிறேன்.

ஒரு திரா​விட இயக்​கத்தை பல வீனப்​படுத்​தி​விட்​டால் பாஜகவை தமிழகத்​தில் வளர்க்க முடி​யும் என அவர்​கள் நம்​பு​கின்​றனர். இந்தயுக்தி, சூழ்ச்​சியைப் புரிந்து கொண்டு அதி​முக முன்​னணி தலை​வர்​கள் செயல்​படு​வது நல்​லது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். நிகழ்​வில், செய்​தித் தொடர்​பாளர் கு.​கா.​பாவலன்​ உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x