Published : 11 Sep 2025 10:21 AM
Last Updated : 11 Sep 2025 10:21 AM

அஞ்சுக்கு ரெண்டு நிச்சயம்..! - கைகூடுமா ஏசிஎஸ்ஸின் அமைச்சர் கனவு?

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக கூட்டணியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். கடந்த முறை வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவருக்காகவே ஸ்பெஷலாக வேலூருக்கு வந்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி. அந்தளவுக்கு மோடியிடமும் அமித் ஷாவிடவும் தனிப்பட்ட செல்வாக்கு பெற்றவர்.

எம்​ஜிஆர் இருந்​த​போது 1980-ல் ஆரணி சட்​டமன்​றத் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆன ஏ.சி.சண்​முகம் தொடர்ந்​து, 1984-ல் வேலூர் மக்​கள​வைத் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு எம்பி ஆனார். அத்​துடன் அவரது வெற்​றிக் கணக்கு நின்​று​விட்​டது. 2001-ல் ஆரணி​யில் போட்​டி​யிட்டு தோற்​றவர், 2014-ல் வேலூர் மக்​களவை தொகு​தி​யில் தாமரை சின்​னத்​தில் போட்​டி​யிட்டு தோற்​றுப் போனார்.

2019-ல் மீண்​டும் வேலூரில் இரட்டை இலை​யில் போட்​டி​யிட்ட போதும் ஏசிஎஸ்​ஸால் ஜெயிக்க முடிய​வில்​லை. இதையடுத்​து, 2024-ல் வேலூரில் மீண்​டும் தாமரை​யில் போட்​டி​யிட்​டும் மலரா​மல் போனார். இந்த நிலை​யில், 25 ஆண்​டு​கள் கழித்து மீண்​டும் சட்​டமன்​றத் தேர்​தல் களத்​துக்கு வருகிறார் சண்​முகம். அதற்​குக் காரணம், தமி​ழ​கத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்சி அமைந்​தால் அமித் ஷா தயவில் அமைச்​ச​ராகலாம் என்ற தொலைநோக்​குத் திட்​டம் என்​கி​றார்​கள்.

அண்​மை​யில் வேலூர் மாவட்​டத்​துக்கு இபிஎஸ் பிரச்​சா​ரப் பயணம் வந்தபோது வேலூர், காட்​பாடி, ஆற்​காடு தொகு​தி​களுக்​கான கூட்​டங்​களில் அவருடன் ஏ.சி.சண்​முக​மும் பங்​கேற்​றார். இதுகுறித்​து, புதிய நீதிக்​கட்சி நிர்​வாகி​களிடம் விசா​ரித்​த​போது, “2026 தேர்​தலில் வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், ஆற்​காடு மற்​றும் ஈரோடு மாவட்​டத்​தில் ஒரு தொகுதி என 5 தொகு​தி​களை அதி​முக-​விடம் கேட்​டுப் பெறும் திட்​டத்​தில் இருக்​கி​றார் ஏசிஎஸ். ஐந்து கிடைக்​காமல் போனாலும் நிச்​ச​யம் இரண்டு தொகு​தி​களில் இம்​முறை போட்​டி​யிட வேண்​டும் என்​பது அவரது திட்​டம். அந்த இரண்டில் ஒன்று ஆரணி அல்​லது வேலூ​ராக இருக்​கும்” என்​ற​னர்.

இதுகுறித்து பேசிய வேலூர் மாவட்ட அதி​முக நிர்​வாகி​களோ, “ஆற்​காடு பிரச்​சா​ரத்​தின் போது இபிஎஸ் தங்​கி​யிருந்த தனி​யார் ஓட்​டலில் ஏ.சி.சண்முக​மும் இபிஎஸ்​ஸும் நீண்ட நேரம் பேசிக்​கொண்​டிருந்​தார்​கள். அப்​போது ஏசிஎஸ் தனது விருப்​பத்தை வெளிப்​படுத்தி இருக்​கி​றார். அதற்கு, ‘இந்த முறை வேலூர் தொகு​தி​யில நீங்​களே நில்​லுங்​கண்​ணே’ன்னு இபிஎஸ் சொல்லி இருக்​கி​றார். அதை ஆமோ​திக்​கும் வகை​யில் தலையாட்​டிய ஏசிஎஸ், ‘அமித் ஷாவிடம் பேசி​விட்​டுச் சொல்​கிறேன்’ என்று சொல்லி இருக்​கி​றார்.

பாஜக தலை​வர்​கள் உள்​ளிட்ட அனை​வ​ருக்​குமே தமி​ழ​கத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்சி தான் அமை​யும் என்ற நம்​பிக்கை இருக்​கிறது. அப்​படி அமைந்​தால் ஏசிஎஸ் வெறுமனே எம்​எல்​ஏ-​வாக போய் உட்​கார விரும்​ப​மாட்​டார். தன்னை அமைச்​ச​ராக்க வாய்ப்​பிருந்​தால் மட்​டுமே சட்​டமன்​றத் தேர்​தலில் போட்​டி​யிடு​வார். அதனால் தான் அமித் ஷாவிடம் பேசி​விட்​டுச் சொல்​வ​தாகக் கூறி இருக்​கி​றார்” என்​றவர்​கள், “அப்​படியே அவர் போட்டியிட்​டாலும் வேலூர் தொகுதி என்​றால் எந்​தப் பிரச்​சினை​யும் இருக்​காது.

அதில்​லாமல், ஏற்​கெனவே வென்ற ஆரணியை அவர் கேட்​டால் சிக்​கல் இருக்​கிறது. ஏனென்​றால், தொடர்ந்து மூன்று தேர்​தல்​களாக தொகு​தியை தக்​க​வைத்து வரும் ஆரணி அதி​முக-​வில் முன்​னாள் அமைச்​ச​ரான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உள்​ளிட்ட பலபேர் போட்​டி​யிட வரிசைகட்டி நிற்கிறார்​கள்” என்​ற​னர்.

ஏசிஎஸ் போடும் கணக்கு குறித்து புதிய நீதிக் ​கட்​சி​யின் வேலூர் மாநகர் மாவட்​டச் செய​லா​ளர் ஜி.பி.கே.​பாலாஜி​யிடம் கேட்​டதற்​கு,
“எது எப்​படி இருந்​தா​லும் எங்​கள் தலை​வர் இரண்டு தொகு​தி​களை நிச்​ச​யம் பெறு​வார். அதில் யார் போட்​டி​யிடு​வார்​கள் என்​பதை அவர் முடிவு செய்வார். எதற்​கும் நாங்​கள் தயா​ராக இருக்​கி​றோம். எங்​கள் முடிவை டிசம்​பரில் சொல்​கி​றோம்” என்​றார்.

தேர்​தல் என்று வந்​து​விட்​டால் ‘பொன் முட்​டை​யிடும் வாத்​தாக’ வலம் வரும் ஏ.சி.சண்​முகம் மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் போதெல்​லாம், “அண்ணே ஜெயிச்சா மத்​திய அமைச்​ச​ராக்​கும்” என்று அவரது விசு​வாசிகள் ஆர்ப்​பரிப்​பார்​கள். இம்​முறை அண்​ணனின் மாநில அமைச்​சர் கனவாவது கைகூடி வரு​கிறதா என்று பார்​க்​கலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x