Published : 10 Sep 2025 05:33 AM
Last Updated : 10 Sep 2025 05:33 AM

தேர்தல்வரை பசி, தூக்கம், ஓய்வின்றி உழைப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தேர்​தல் நாள் வரை பசி, தூக்​கம், ஓய்வை மறந்து உழைப்பை கொடுங்​கள் என்று திமுக​வினருக்கு முதல்​வர் மு.க.ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். ஓரணி​யில் தமிழ்​நாடு மற்​றும் திமுக முப்​பெரும் விழா தொடர்​பாக, திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் காணொலி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் முதல்​வர் ஸ்​டா​லின் பேசி​ய​து: கடந்த 10 ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் படு​பா​தாளத்​துக்கு போன தமிழகத்​தின் வளர்ச்​சியை மீட்​டெடுத்து 11.19 சதவீத வளர்ச்​சி​யுடன் நாட்​டிலேயே முதன்மை மாநில​மாக திமுக ஆட்​சி​யில் தமிழகத்தை உயர்த்​தி​யுள்​ளோம். அடுத்​தக்​கட்ட பாய்ச்​சலுக்கு அடித்​தளமிட ஜெர்​மனி, இங்​கிலாந்​துக்கு சென்று ரூ.15,516 கோடி முதலீடு​களை ஈர்த்து ‘சூப்​பர் ஹிட்’ அடித்​துள்ளோம்.

தமிழகத்தை ஒரு டிரில்​லியன் பொருளா​தா​ர​மாக உயர்த்​தும் இலக்கை நாம் விரைந்து அடைய, இப்​பயணங்​கள் வெற்​றியடைந்​தால் மட்​டும் போதாது. வரவிருக்​கும் தேர்​தலிலும் மாபெரும் வெற்​றியைப் பெற வேண்​டும். இதற்​கான அடித்​தள​மாகத்​தான், ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்பை தொடங்​கினோம்.

சர்​வா​தி​கார மனப்​பான்​மை​யுடன் தமிழகத்தை வஞ்​சிக்​கும் மத்​திய அரசுக்கு எதி​ராக, தமிழகத்​தின் மண், மொழி, மானம் காக்க, தமிழக மக்​களை ஒன்​றிணைக்க நீங்​கள் எல்​லோரும் களத்​தில் சிறப்​பாகப் பணி​யாற்​றினீர்​கள். ஒரு கோடிக்​கும் அதி​க​மான குடும்​பங்​களை, ஓரணி​யில் தமிழ்​நாடு இயக்​கத்​தில் இணைத்​துள்​ளோம்.

தேர்​தல் முடி​யும் வரைக்​கும் ஓய்வு என்ற சொல்​லையே மறந்​து​விடுங்​கள். ஏனென்​றால், 2026-ல் நாம் பெறப்​போகும் வெற்​றி, திமுக​வுக்​கான வெற்றி மட்​டுமல்ல. ஒட்​டுமொத்த தமிழகத்​துக்​கான வெற்​றி. மக்​களைக் குழப்ப எதிர்க்​கட்​சிகள் என்ன வேண்​டு​மா​னாலும் செய்​யட்​டும். அது​தான் அவர்​களால் முடி​யும். மக்​களை ஒன்​றிணைத்​து, அவர்​களின் துணை​யோடு தமிழ்​நாட்​டின் மண், மொழி, மானம் காக்க நம்​மால்​
தான் முடி​யும்.

அதற்​கான வலிமையை நாம் பெறப்​போகும் நாள்​தான், வரும் செப்​.17 முப்​பெரும் விழா. அதற்கு முன், பேரறிஞர் அண்​ணா​வின் செப். 15-ம் நாள், 68 ஆயிரம் வாக்​குச்​சாவடிகளி​லும் அந்​தந்த வாக்​குச்​சாவடிகளில் இணைந்த குடும்​பங்​களை அழைத்​து, வாக்​குச்​சாவடி​யில் உள்ள பிஎல்ஏ, பிடிஏ, பிஎல்சி கூட்​டங்​களை நடத்த வேண்​டும்.

நம்​மோடு இணைந்​திருக்​கும் எல்​லோரை​யும் தேர்​தல் வரைக்​கும் நம்​முடனே இணைத்​துக் கொண்டு களப்​பணி​யாற்ற வேண்​டும். லட்​சக்​கணக்​கான உடன்​பிறப்​பு​கள் முப்​பெரும் விழாவுக்​காக கரூர் நோக்கி திரண்டு வரு​வார்​கள். எல்​லோரும் பாது​காப்​பாக வந்து போவதை உறுதி செய்​யுங்​கள். அவர்​களுக்​குத் தேவை​யான அடிப்​படை வசதி​கள் அனைத்​தும் இருக்க வேண்​டும். விழா முடிந்த பிறகு, செப்​.20-ம் ல் ஓரணி​யில் தமிழ்​நாடு கூட்​டங்​களை மாவட்​ட​வாரி​யாக நடத்த வேண்​டும்.

நமது அரசின் திட்​டங்​களால், மக்​களிடையே நமக்கு இருக்​கும் ஆதரவு உணர்வை அப்​படியே தேர்​தல் வரைக்​கும் எடுத்​துச் சென்று
அறு​வடை செய்ய ஒவ்​வொரு​ வரும் களத்​தில் தீவிர​மாகப் பணி​யாற்ற வேண்​டும். அடுத்து நமது இலக்கு 2026-ல் தி​ரா​விட மாடல் 2.0 அமைய வேண்டும் என்​பதே. அதற்கு தேர்​தல் நாள் வரை பசி, தூக்​கம், ஓய்வை மறந்து உழைப்பை கொடுங்​கள். ஓய்​வறி​யாச்​ சூரிய​னாக உழைப்​போம். இவ்​வாறு தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x