Published : 09 Sep 2025 05:57 AM
Last Updated : 09 Sep 2025 05:57 AM

ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணி: உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில், ரூ.30 கோடி​யில் விரு​கம்​பாக்​கம் கால்​வாய் சீரமைப்பு பணி​களை துணை முதல்​வர் உதயநிதி நேற்று தொடங்​கி​ வைத்​தார். விரு​கம்​பாக்​கம் கால்​வாய் மற்​றும் ஓட்​டேரி நல்லா கால்​வாய் ஆகிய​வற்றை பராமரிக்​கும் உரிமை​யை, நீர்வள ஆதா​ரத் துறை​யிட​மிருந்து சென்னை மாநக​ராட்சி பெற்​றுள்​ளது.

அதன்​படி, விரு​கம்​பாக்​கம் கால்​வாயை சீரமைக்​க​வும், அதன் வெள்​ள நீர் மேலாண்​மையை மேம்​படுத்​த​வும், அதை கூவம் ஆற்​றுடன் இணைக்​க​வும் மாநக​ராட்சி நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

இந்​நிலை​யில், வடகிழக்கு பரு​வ​மழையை முன்​னிட்​டு, விரு​கம்​பாக்​கம் கால்​வாயை ரூ.30 கோடி​யில் மாநக​ராட்சி சார்​பில், சீரமைக்​கும் பணி​கள் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. இதில் துணை முதல்​வர் உதயநிதி பங்​கேற்​று, நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்சர் கே.என்​.நேரு முன்னிலை​யில், கால்​வாய் தூர்​வாரும் பணி​களை கொடியசைத்து தொடங்​கி​ வைத்தார்.

இத்​திட்​டத்​தின் கீழ், கால்​வா​யில் தூர்​வாருதல், தடுப்​புச் சுவர்​களை உயர்த்​திக் கட்​டு​தல், சங்​கிலி வேலி அமைத்​தல் உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்ளன.

இப்​பணி​கள் மூலம் வளசர​வாக்​கம் மண்​டலத்​தில் புவனேஸ்​வரி நகர் உள்​ளிட்ட பகு​தி​கள், கோடம்​பாக்​கம் மண்​டலத்​தில் சின்​மயா நகர், திருநகர் உள்​ளிட்ட பகு​தி​கள், அண்​ணாநகர் மண்​டலத்​தில் திருக்​குமரன் நகர், அன்னை சத்யா நகர், காம​ராஜர் நகர், கலெக்டர் காலனி உள்​ளிட்ட பகு​தி​கள், தேனாம்​பேட்டை மண்டலத்​தில் திரு​வள்​ளுவர்புரம், கில் நகர் உள்​ளிட்ட பகு​தி​கள் பயன்​பெற உள்ளன.

இந்​நிகழ்ச்​சி​யில், மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்​குநர் டி.ஜி.​வினய், நிலைக்​குழு தலை​வர் (பணி​கள்) நே.சிற்​றரசு, துணை ஆணை​யர் வி.சிவகிருஷ்ண​மூர்த்தி உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x