Published : 09 Sep 2025 06:13 AM
Last Updated : 09 Sep 2025 06:13 AM

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம்: பின்னணி என்ன?

சென்னை: ம​தி​முக​வில் துணை பொதுச் செய​லா​ள​ராக இருந்த மல்லை சத்​யா, கட்​சி​யில் இருந்து நிரந்​தர​மாக நீக்​கப்​படு​வ​தாக வைகோ அறி​வித்​துள்​ளார். மதி​முக துணை பொதுச்​செய​லா​ள​ராக பதவி வகித்​தவர் மல்லை சத்​யா. மதி​முக முதன்​மைச்செய​லா​ள​ராக துரை வைகோ பதவி​யேற்​றது முதல் மல்லை சத்​யா​வுக்​கும் மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோவுக்​கும் இடையே மோதல் தொடங்​கியது.

இதையடுத்​து, கட்சி கட்​டுப்​பாட்டை மீறிய​தாக மல்லை சத்யா மதி​முக​வில் இருந்து தற்​காலிக​மாக நீக்​கப்​பட்​டார். மேலும் மல்லை சத்​யா​விடம் கடந்த 17-ம் தேதி விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பட்​டது. அதற்கு அவர் பதிலளித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், இதுகுறித்து மல்லை சத்​யா​வுக்கு மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ அனுப்​பிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: நீங்​கள் அளித்த விளக்க கடிதத்​தில் குற்​றச்​சாட்​டுக்​களை மறுக்​க​வில்​லை. அதற்கு விளக்​க​மும் அளிக்​க​வில்​லை. தாங்​கள் அளித்​துள்ள பதில், ஒழுங்கு நடவடிக்​கைகளை கைவிட முகாந்​திர​மாக இல்​லை. தங்​கள் மீதுள்ள அனைத்து குற்​றச்​சாட்​டு​களும், கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டதும் உறுதியாகியுள்​ளது.

மதிமுக கொள்கைக்கும் மாறாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கட்​சிக்​கும், தலை​மைக்​கும் எதி​ராக செயல்​பட்​ட​தால், கட்சி விதி​களின்​படி துணைப் பொதுச்​செய​லா​ளர் பொறுப்​பிலிருந்​தும், அடிப்​படை உறுப்​பினர் என்ற தகு​தி​யில் இருந்தும் நிரந்​தர​மாக நீக்கி அறிவிக்​கிறேன். இவ்​வாறு கடிதத்​தில் வைகோ கூறி​யுள்​ளார்.

‘மறுமலர்ச்சி திமுக இல்லை மகன் திமுக’ - மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறியதாவது: இதில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை, மதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு இருந்ததாக எனக்கு இதுவரை தெரியாது. ஏற்கெனவே தீர்ப்பை எழுதிவிட்டு போலி விசாரணை நாடகம் நடத்தியுள்ளனர். மதிமுக, திராவிட கொள்கைகளின் பிரிவினைவாதிகளாக செயல்படத் தொடங்கி விட்டது.

இது மறுமலர்ச்சி திமுக இல்லை மகன் திமுகவாக மாறி விட்டது. செப்.15-ம் தேதி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா நடத்தவுள்ளோம் அதில் எங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, திமுக மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்வரின் வெளிநாடு முதலீடு குறித்த செய்தியை மழுங்கடிக்கவே இதை இன்று அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x