Published : 09 Sep 2025 05:46 AM
Last Updated : 09 Sep 2025 05:46 AM

பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி பிரச்சினைகள் தீரும்: தமிழிசை நம்பிக்கை

சென்னை: தேர்​தலுக்கு முன்​பாகவே கூட்​டணி பிரச்​சினை​கள் தீர்ந்​து​விடும் என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரிவித்​தார்.

சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: லண்​டனில் அம்​பேத்​கர் படிக்​கும்​போது தங்​கி​யிருந்த இல்​லத்தை முதல்​வர் ஸ்டா​லின் பார்த்​துள்​ளார். அந்த இல்​லம் ஏலத்​துக்கு வரு​வதை அறிந்து அதனை பாஜக வாங்​கியது. அம்​பேத்​கரை பற்றி புகழ்​பாடிக் கொண்​டிருக்​கும் யாருமே கண்​டு​கொள்​ளாத நிலை​யில், பாஜக ஏறக்​குறைய ரூ.30 கோடி செலவு செய்​து, அந்த இல்​லத்தை வாங்கி மதிப்​புமிக்க நிரந்தர ஆவண காப்​பக​மாக மாற்றி வைத்​திருக்​கிறது.

அங்கு பெரி​யாரோடு அம்​பேத்​கர் இருக்​கும் படத்தை பார்த்து மகிழ்ந்​தேன் என முதல்​வர் சொல்​கிறார். மாற்​றுக் கருத்​துடைய தலை​வர்​களின் படத்தை அகற்​றாமல் பரந்த மனப்​பான்​மையோடு பாஜக நடந்து கொள்​கிறது.

வெளி​நாடு​களில் முதலீடு​களை ஈர்க்க அடிப்​படை காரணம் பிரதமர் மோடி தான். ஜிஎஸ்டி சீரமைப்​புக்​காக நன்றி தெரி​வித்து அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனுக்கு அனைத்து மாநில அரசுகளும் கடிதம் அனுப்பி உள்​ளன. ஆனால், ஆளும் திமுக அரசு ஒரு கடிதம் கூட அனுப்​ப​வில்​லை.

அரசி​யல் சிந்​தனை மட்​டுமே அவர்​களுக்கு உள்​ளது. பாஜக கூட்​டணி பலமாக உள்​ளது. 2026-ல் நாங்​கள்​தான் வெற்றி பெறு​வோம். துணை குடியரசுத் தலை​வர் தேர்​தலில் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறுதி பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெறு​வார்.

அதில் எந்த சந்​தேக​மும் இல்​லை. எனவே, தமிழர்​களின் எண்​ணம் அவரோடு இருக்​கிறது என்​பதை தமிழக எம்​.பி.க்​கள் பறைசாற்ற வேண்​டும். டிடிவி தினகரன் கூறியது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அதி​முக உட்கட்சி பிரச்​சினை பற்​றி கருத்து கூற விரும்​ப​வில்​லை. 2026 தேர்​தலுக்​குள் கூட்டணியில் நிலவும் அனைத்து பிரச்​சினை​களும் தீர்ந்​து​விடும்​. இவ்​வாறு தமிழிசை​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x