Published : 08 Sep 2025 05:58 AM
Last Updated : 08 Sep 2025 05:58 AM

200-வது நாளில் ‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ திட்டம்: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பங்கேற்பு

​முதல்​வரின் பிறந்​த​நாளை​யொட்டி நடை​பெற்று வரும் ‘அன்​னம் தரும் அமுதக்​கரங்​கள்’ திட்​டத்​தின் 200-வது நாளான நேற்று சென்னை கொளத்தூர் பகுதியில் அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ரஜகண்​ணப்​பன் பொது​மக்களுக்கு உணவளித்​தார். உடன் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு, கலாநிதி வீரா​சாமி எம்​.பி.உள்ளிட்டோர்.

சென்னை: ​முதல்​வரின் பிறந்​த​நாளை​யொட்டி நடை​பெற்று வரும் ‘அன்​னம் தரும் அமுதக்​கரங்​கள்’ திட்​டத்​தின் 200-வது நாளில் அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் பங்​கேற்று பொது​மக்​களுக்கு உணவளித்​தார்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 72-வது பிறந்​த ​நாளை முன்​னிட்டு இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஏற்பாட்டில் ‘அன்​னம் தரும் அமுதக்​கரங்​கள்’ திட்​டம் தொடங்​கப்​பட்டு பல்​வேறு இடங்​களில் காலை உணவு வழங்​கப்​பட்டு வருகிறது.

இத்​திட்​டம் தொடங்​கப்​பட்டு 24-வது நாளில் அமைச்​சர் சக்​கர​பாணி, 30-வது நாளில் அமைச்​சர் கோவி.செழியன், 50-வது நாளில் ஆர்​.​காந்​தி, 75-வது நாளில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், 100-வது நாளில் அமைச்​சர் எ.வ.வேலு, 125-வது நாளில் அமைச்​சர் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன், 150-வது நாளில் அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன், 175-வது நாளில் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்​து​கொண்டு பொது​மக்​களுக்கு உணவு அளித்​தனர்.

அதைத்​தொடர்ந்து ‘அன்​னம் தரும் அமுதக்​கரங்​கள்’ திட்​டத்​தின் 200-வது நாளான நேற்​று, கொளத்​தூர் மேற்கு பகு​தி​யில் உள்ள தென் பழனி நகர், நேரு தெரு, சீனி​வாசன் நகர் ஆகிய இடங்​களில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ ராஜகண்​ணப்​பன் பங்​கேற்று பொது​மக்​களுக்கு காலை உணவு வழங்​கி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “விஜய் போன்ற சிலர் தனி​யாக அரசி​யலுக்கு வரலாம். அவர்​களால் உண்​மை​யான மாற்​றத்தை கொண்​டுவர முடி​யாது. அந்​த கூட்​டத்​தில் வந்​தவர்​களில் பலர் 10, 12, 13 வயதுடைய ஓட்டு போடத் தெரி​யாத சிறு​வர்​கள் தான்” என்று தெரி​வித்​தார்.

இந்​நிகழ்​வில் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு, கலாநிதி வீரா​சாமி எம்​.பி., ஜோசப் சாமுவேல் எம்​எல்ஏ, திமுக பகு​திச் செய​லா​ளர்​கள் எ.நாக​ராஜன், ஐசிஎப்​.​முரளிதரன், கூ.பீ.ஜெ​யின், வே.​வாசு, மண்​டலக் குழு தலை​வர்​கள் சரிதா மகேஷ்கு​மார், ஸ்ரீரா​முலு உள்ளிட்டோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x