Published : 08 Sep 2025 06:56 AM
Last Updated : 08 Sep 2025 06:56 AM

அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜக பின்புலம் உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு

திருவாரூர்: அ​தி​முகவை பிளவுபடுத்​து​வ​தில் பாஜக​வின் பின்​புலம் உள்​ளது என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார்.

திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அதி​முக​வில் இருந்து பிரிந்து போனவர்​கள் அனை​வரும் ஒன்​றாக இணைய வேண்​டும் என்று கூறி, அதற்​காக பழனி​சாமிக்கு காலக்​கெடு விதித்த முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனை கட்​சி​யில் இருந்து நீக்​கி​யுள்​ளனர். ஏற்​கெனவே சசிகலா, டிடி​வி.​

தினகரன், ஓ.பன்​னீர்​செல்​வம் என பல குழுக்​களாக இருக்​கும் அதி​முக​வில், புதி​தாக செங்​கோட்​டையன் என்ற குழு உரு​வாக வாய்ப்பு ஏற்​பட்​டுள்​ளது. அனை​வரும் சுயநலப் போக்​குடனே இந்​தப் பிரச்​சினையை அணுகு​வ​தால், இப்​போதைக்கு அதி​முக இணைய வாய்ப்பே கிடை​யாது.

அதி​முகவை பிளவுபடுத்​து​வ​தில் பாஜக பின்​புல​மாக இருந்து செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது. இதை அதி​முக​வில் இருப்​பவர்​கள் உணர வேண்​டும். கொள்கை வேறு, கூட்​டணி வேறு என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சொல்​லிக்​கொண்​டிருக்​கிறார். இதனால், பாஜக, அதி​முக கூட்​டணி மேலும் மேலும் பலவீனமடைந்து கொண்​டிருக்​கிறது.

கடந்த 8 ஆண்​டு​களாக 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதித்து மக்​களை துயரத்​துக்கு உள்​ளாக்​கிய பாஜக, தற்​போது சிறிய அளவு வரியை மட்​டும் குறைத்​துள்​ளது. தமிழக முதல்​வர் ஸ்டா​லினின் வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்க்​கும் முயற்சி வரவேற்​கத்​தக்கது.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு நாள் வரும் 12-ம் தேதி வரு​கிறது. அன்று தமிழகம் முழு​வதும் ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் உடல் தானம் செய்​யத் தீர்​மானித்​துள்​ளனர். இதன்​மூலம் உடல் தானம் குறித்த விழிப்​புணர்​வு ஏற்​படும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x