Published : 08 Sep 2025 06:45 AM
Last Updated : 08 Sep 2025 06:45 AM

செங்கோட்டையன் மீதான நடவடிக்கையை கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ராஜினாமா

செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து, கோபி தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், முன்னாள் எம்.பி. சத்தியபாமாவிடம் நேற்று ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.

ஈரோடு: செங்​கோட்​டையன் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​யைக் கண்​டித்து 1,000-க்​கும் மேற்​பட்ட அதி​முக நிர்​வாகி​கள் ராஜினாமா செய்​வ​தாக கடிதம் கொடுத்​தனர்.

அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்களில் தொடங்க வேண்​டும் என பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு கெடுவிதித்த முன்​னாள் அமைச்​சர் செங்கோட்டையனின், அமைப்​பு செய​லா​ளர் மற்​றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் பதவி​களைப் பறித்து பழனிசாமி அறி​வித்​தார். அவருடன், கோபி, நம்​பியூரைச் சேர்ந்த சில நிர்​வாகி​களும் நீக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், கோபி சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட அதி​முக ஒன்​றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செய​லா​ளர் உள்​ளிட்ட பல்​வேறு பொறுப்​பு​களை வகிக்​கும் 1,000-க்​கும் மேற்​பட்​டோர் கோபி அதி​முக அலு​வல​கத்​துக்கு வந்​து, செங்​கோட்​டையன் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கையை கண்​டித்து ராஜி​னாமா செய்​வ​தாக கடிதம் கொடுத்​தனர்.

அதில், "அதி​முக பழைய வலிமையை பெற வேண்​டும். வெற்​றிப் பாதை​யில் பயணிக்க வேண்​டும். எம்​ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்​களுக்கு பயனுள்ள ஆட்​சி​யைத் தர வேண்​டும். இந்த நல்ல நோக்​கம் நிறைவேற அதி​முக ஒன்​றுபட வேண்​டும்.

இதற்காக கட்​சியி​லிருந்து பிரிந்​தவர்​களை இணைக்க வேண்​டும் எனசெங்​கோட்​டையன் கூறி​யிருந்​தார். இதற்​காக அவரை பதவி​யில் இருந்து நீக்​கியதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்​து, எங்​களது கட்​சிப் பதவி​களில் இருந்து வில​கு​கிறோம். கட்சி ஒன்​று​பட்​டால் பதவி​யில் நீடிப்​போம்" என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதே​போல, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி செய​லா​ள​ரும், முன்​னாள் எம்​.பி.​யு​மான சத்​தி​ய​பா​மா​வும், கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜி​னாமா செய்​வ​தாக நேற்று தெரி​வித்​தார். இதற்​கிடை​யில், செங்​கோட்​டையன் விதித்த கெடு வரும் 15-ம் தேதி நிறைவடைகிறது.

அது​வரை கட்சி நிர்​வாகி​களைச் சந்​திக்க முடிவு செய்​துள்ள செங்​கோட்​டையன், பின்​னர் சசிகலா, ஓபிஎஸ் உள்​ளிட்​ட​வர்​களைச் சந்​தித்​து, அடுத்​தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோ​சனை நடத்த முடிவு செய்​துள்​ள​தாக அவரது ஆதர​வாளர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x