Published : 08 Sep 2025 06:02 AM
Last Updated : 08 Sep 2025 06:02 AM

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் 20 இடங்​களில் ஹைட்ரோ கார்​பன் கிணறுகளுக்​கான அனு​மதி ரத்து செய்​வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் 20 இடங்​களில் ஹைட்ரோ கார்​பன் கிணறுகளை அமைக்க அளிக்​கப்​பட்ட அனு​ம​தியை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என்று தமிழ்​நாடு மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யத்​துக்கு ஆணை​யிடப்​பட்​டிருப்​ப​தாக திமுக அரசு அறி​வித்து 15 நாட்​கள் ஆகிறது. ஆனால், ஓஎன்​ஜிசி நிறு​வனத்​துக்கு அளிக்​கப்​பட்ட அனு​மதி இன்று வரை திரும்​பப்​பெறப்​பட​வில்​லை.

ஹைட்ரோ கார்​பன் கிணறுகளை தடுக்க வேண்​டும் என்ற எண்​ணம் தமிழ்​நாடு அரசுக்கு இல்​லை. மாறாக விவ​சா​யிகளை ஏமாற்ற வேண்​டும் என்ற எண்​ணம் மட்​டுமே இருக்​கிறது. மீத்​தேன், ஹைட்ரோ கார்​பன் திட்​டங்​களை திணிப்​பது, அதற்கு மக்​களிடம் எதிர்ப்பு எழுந்​தால் உடனடி​யாக திரும்ப பெறு​வது என்ற உத்​தி​யைத்​தான் திமுக அரசு கடைபிடித்து வரு​கிறது.

2010-ம் ஆண்​டில் மீத்​தேன், ஹைட்ரோ கார்​பன் திட்​டங்​களை காவிரி பாசன மாவட்​டங்​களில் செயல்​படுத்த அனு​ம​தித்த திமுக அரசு, அதற்கு மக்​களிடம் எதிர்ப்பு எழுந்​தவுடன் ஆய்​வு​கள் மட்​டுமே அனு​ம​திக்​கப்​பட்​ட​தாக பல்டி அடித்​ததை தமிழக மக்​கள் இன்​னும் மறக்​க​வில்​லை.

20 இடங்​களில் ஹைட்ரோ கார்​பன் கிணறுகள் அமைக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டால், அதன்​பின் ராம​நாத​புரம் மாவட்​டம் பாலை​வன​மாவதை தடுக்க முடி​யாது. எனவே, விவ​சா​யிகளுக்கு துரோகம் செய்​யாமல் ஹைட்ரோ கார்​பன் கிணறுகள் திட்​டத்​துக்கு அளிக்​கப்​பட்​டுள்ள அனு​ம​தியை மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யம் ரத்து செய்​வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x