Published : 08 Sep 2025 05:22 AM
Last Updated : 08 Sep 2025 05:22 AM
சென்னை: ஏழை மக்களை ஏமாற்றி தான் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டுமா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி எண் 503-ல் தெரிவித்த ஸ்டாலின் சொன்னதை செய்தாரா? ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் கிணற்றில் போட்ட கல்லாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிற்பதும், அதை நிறைவேற்றப் போவதில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும்.
ஏழை மக்களை இப்படி ஏமாற்றி அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துதான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா. அப்படியென்ன பதவி மோகம் அவர்களுக்கு, என்பதுதான் அனைத்து தரப்பினரின் ஒரே ஆதங்கமாக தற்போது ஒலிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு மக்கள் விரோத கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிப் பதவி கூட கிடைக்காது. பாதிக்கப்பட்ட பொதுஜனம் அதை ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT