Published : 08 Sep 2025 05:22 AM
Last Updated : 08 Sep 2025 05:22 AM

ஏழை மக்களை ஏமாற்றித்தான் ஆட்சியை பிடிக்க வேண்டுமா? - திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: ஏழை மக்​களை ஏமாற்றி தான் திமுக ஆட்​சியை பிடிக்க வேண்​டுமா என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் நயி​னார் நாகேந்​திரன் கூறி​யிருப்​ப​தாவது: அனைத்து குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும் மாதம் ரூ.100 எரி​வாயு மானி​யம் வழங்​கப்​படும் என்று வாக்​குறுதி எண் 503-ல் தெரி​வித்​த ஸ்டா​லின் சொன்​னதை செய்​தா​ரா? ஆட்சி பொறுப்​பேற்று நான்கு ஆண்​டு​கள் கடந்​தும் கிணற்​றில் போட்ட கல்​லாக அந்த வாக்​குறுதி நிறைவேற்​றப்​ப​டா​மல் நிலு​வை​யில் நிற்​பதும், அதை நிறைவேற்​றப் போவ​தில்லை என்​பதும் மக்​களுக்கு நன்கு தெரி​யும்.

ஏழை மக்​களை இப்​படி ஏமாற்றி அவர்​களுக்கு நம்​பிக்கை துரோகம் செய்​து​தான் திமுக ஆட்​சி​யைப் பிடிக்க வேண்​டு​மா. அப்​படி​யென்ன பதவி மோகம் அவர்​களுக்​கு, என்​பது​தான் அனைத்து தரப்​பினரின் ஒரே ஆதங்​க​மாக தற்​போது ஒலிக்​கிறது. இப்​படிப்​பட்ட ஒரு மக்​கள் விரோத கட்​சிக்கு வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எதிர்க்​கட்​சிப் பதவி கூட கிடைக்​காது. பாதிக்​கப்​பட்ட பொதுஜனம் அதை ஒரு​போதும் அனு​ம​திக்​காது. இவ்​வாறு அதில்​ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x