Published : 08 Sep 2025 05:14 AM
Last Updated : 08 Sep 2025 05:14 AM

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நேற்று பொதுமக்களிடையே பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. | படங்கள்: நா.தங்கரத்தினம் |

திண்​டுக்​கல்: பசும்​பொன் முத்​து​ராமலிங்​கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செயலாளர் பழனி​சாமி கூறி​னார். திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் நேற்று 2-வது நாளாக பொது​மக்​களிடையே பழனி​சாமி பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டார். முன்​னாள் அமைச்​சர்​கள் திண்​டுக்​கல் சி.சீனி​வாசன், நத்​தம் ஆர்​.​விஸ்​வ​நாதன் முன்னிலை வகித்தனர்.

ஆத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட சின்​னாளபட்​டி​யில் பழனி​சாமி பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் ரூ.350 கோடி​யில் திண்​டுக்​கல்​லில் அரசு மருத்​து​வக் கல்​லூரி அமைக்​கப்​பட்​டது. இது​போன்ற ஏதாவது பெரிய திட்​டத்தை இங்​குள்ள அமைச்​சர் கொண்டு வந்​திருக்​கிறா​ரா? தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது.

வெடிகுண்டு கலாச்​சா​ரம் வந்​து​விட்​டது. தமிழக அரசு செயலற்று இருப்​ப​தால், மக்​கள் நிம்​ம​தி​யாக வாழ முடிய​வில்​லை. அனைத்து ஊராட்​சிகள், ஒன்​றி​யங்​களில் உள்ள நிதியை ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் வேறு பணிக்கு செல​வழிக்​கிறார். இது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தது.

திமுக மக்​களுக்​கான கட்சி அல்ல. ஒரு குடும்​பத்​துக்​காக உள்ள கட்​சி. திமுக​வில் உண்​மை​யாக உழைப்​பவர்​களுக்கு மரி​யாதை இல்​லை. முதல்​வரின் குடும்​பத்​தை சேர்ந்​தவர்​களுக்கு மட்​டுமே மரி​யாதை வழங்​கப்​படு​கிறது.

திமுக ஆட்​சி​யில் முடக்​கப்​பட்ட திட்​டங்​கள் அனைத்​தும், மீண்​டும் அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் செயல்​படுத்​தப்​படும். விண்ணை முட்​டும் அளவுக்கு உயர்ந்​து​விட்ட விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்த திமுக அரசு எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்கவில்லை.

இந்​திய சுதந்​திரப் போராட்​டத்​தில் தீவிர​மாகப் பங்​கேற்ற பசும்​பொன் முத்​து​ராமலிங்க தேவர், வாழ்​நாள் முழு​வதும் அனைத்து தரப்பு மக்​களுக்​காக​வும் வாழ்ந்​தவர். தனது சொத்​தில் பெரும் பகு​தியை சாதி மதம் பார்க்​காமல் மக்​களுக்கு தான​மாக வழங்கியவர்.

தென் மாவட்ட மக்​களின் இதயத்​தில் வாழும் பசும்​பொன் முத்​து​ராமலிங்க தேவருக்கு நாட்​டின் உயரிய விரு​தான பாரத ரத்னா விருது வழங்க வேண்​டும். அதே​போல, தேசி​ய​மும் தெய்​வீக​மும் தனது இரு கண்​கள் என வாழ்ந்​து​ காட்​டிய பசும்​பொன் முத்​து ராமலிங்​கத் தேவர் பெயரை மதுரை விமான நிலை​யத்​துக்கு சூட்ட வேண்​டும். இதற்​கான முயற்​சிகளை அதி​முக முன்னெடுக்கும். இவ்​வாறு பழனிசாமி பேசினார்.

5-ம் கட்ட பிரச்​சா​ரம்: இதனிடையே அதிமுக தலைமை வெளி​யிட்​ட அறிக்​கை​: கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தனது 5-ம் கட்ட பிரச்​சா​ரப் பயணத்தை வரும் 17-ம் தேதி தரு​மபுரி​யில் தொடங்​கு​கிறார். அன்று தரு​மபுரி, பாப்​பிரெட்​டிபட்​டி, அரூர் தொகு​தி​களி​லும், வரும் 18-ம் தேதி பாலக்​கோடு, பென்​னாகரம், 19-ம் தேதி நாமக்​கல் மாவட்​டம் ராசிபுரம், சேந்​தமங்​கலம், 20-ம் தேதி நாமக்​கல், பரமத்தி வேலூர், 21-ம் தேதி திருச்​செங்​கோடு, குமார​பாளை​யம் தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் செய்​கிறார்.

தொடர்ந்​து, வரும் 23-ம் தேதி நீல​கிரி மாவட்​டம் குன்​னூர், உதக மண்​டலம், 24-ம் தேதி கூடலூர், 25-ம் தேதி திண்​டுக்​கல் மாவட்​டம் வேட சந்​தூர், கரூர், 26-ம் தேதி கரூர் மாவட்​டம் அரவக்​குறிச்​சி, கிருஷ்ண​ராயபுரம், குளித்​தலை தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ளார். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நேற்று பொதுமக்களிடையே பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x