Published : 08 Sep 2025 12:03 AM
Last Updated : 08 Sep 2025 12:03 AM

தமிழகத்தில் இயன்றவரை முதலீடு செய்ய வேண்டும்: லண்டனில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 

லண்டனில் நடை​பெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்​சி​யில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இதில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா வாழ் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: வெளி​நாடு வாழ் தமிழர்​கள் அனை​வரும் ஆண்​டுக்கு ஒரு முறை​யா​வது குடும்​பத்​துடன் தமிழகத்​துக்கு வாருங்​கள். உங்​களால் இயன்​றவரை அங்கு முதலீடு செய்​யுங்​கள் என்று லண்​டனில் நடை​பெற்ற தமிழர்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் அழைப்பு விடுத்​துள்​ளார்.

தமிழகத்தை 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம் கொண்ட மாநில​மாக உரு​வாக்க அரசு தீவிர முயற்சிஎடுத்து வரு​கிறது. இதற்​காக, முதலீட்​டாளர்​கள் மாநாடு, முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக பல்​வேறு சலுகைகள் அறி​விப்பு என பல்​வேறு நடவடிக்​கைகளை அரசு மேற்​கொண்டு வரு​கிறது. முதலீடு​களை ஈர்க்க முதல்​வர் ஸ்டா​லின் வெளி​நாட்டு பயண​மும் மேற்​கொண்டு வரு​கிறார். அந்த வகை​யில், தமிழகத்​துக்கு முதலீடு​களை ஈர்க்​கும் வித​மாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்​வர் ஸ்டா​லின் ஐரோப்​பியநாடு​களுக்கு பயணம் மேற்கொண்டார். முதல்​கட்​ட​மாக ஜெர்​மனிக்கு சென்ற அவர் பின்னர் இங்கிலாந்​தில் பயணம் மேற்​கொண்டார்.

முதல்​வரின் இந்த பயணத்தின் போது, இந்​துஜா குழு​மம் உள்​ளிட்ட பல்​வேறு நிறு​வனங்​கள் தமிழகத்​தில் தொழில் தொடங்​குதல், விரி​வாக்​கம் செய்​தல் போன்​றவற்​றுக்கு தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் செய்​துள்​ளன. அந்த வகை​யில், முதல்​வர் ஸ்டா​லினின் ஜெர்​மனி, இங்​கிலாந்து பயணத்​தால் தமிழகம் பெற்​றுள்ள மொத்த முதலீடு ரூ.15,516 கோடி. இதன்​மூலம் 17,613 பேருக்கு வேலை​வாய்ப்​பு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து பயணத்தின் நிறைவாக, லண்​டனில் நடை​பெற்ற ‘மாபெரும் தமிழ்க்கனவு - இங்​கிலாந்து வாழ் தமிழர்​கள் சந்​திப்​பு’ நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் கலந்து கொண்டு, மாணவர்​களின் கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்​தார்.

இந்த நிகழ்​வில் அவர் பேசி​ய​தாவது: உலகின் அனைத்து பகு​தி​களி​லும் வசிக்​கும் தமிழர்​கள், மிக எளிய பின்​புலங்​களில் இருந்​து, படித்து முன்​னேறி, முக்​கிய பொறுப்​பு​களுக்கு வந்​துள்​ளனர். அவர்​கள் சுயமரி​யாதை​யுடன், மதிப்​புமிக்க இடத்​தில் இருப்​பதை பார்த்​து,திமுக தலை​வ​ராக, தமிழக முதல்​வ​ராக மிக​வும் பெரு​மைப்​படு​கிறேன். ‘தி​ரா​விடத்​தால் வாழ்​கிறோம்’ என்று பெரு​மிதத்​துடன் சொல்​லும் தமிழர்​களை பார்க்​கிறேன். அவர்​கள் தமிழகத்​தின் அறிவிக்​கப்​ப​டாத தூதர்​களாக இருக்​கின்​றனர். இதையெல்​லாம் பார்க்​கும்​போது, தமிழுக்கு தீங்கு நினைக்​கும் யாருடைய எண்​ண​மும், ஒரு​போதும் நிறைவேறாது என்ற எண்​ணம் வலுப்​பெறுகிறது.

அடுத்த தலை​முறை தமிழர்​கள், நம்​மை​விட அதிக உயரத்​தில் இருக்க வேண்​டும். ஆண்​டுக்கு ஒரு முறை​யா​வது அனை​வரும் குடும்​பத்​துடன் தமிழகம் வாருங்​கள். அங்கு இயன்ற முதலீடு​களை செய்​யுங்​கள். உங்​கள் சகோ​தர​னாக இந்த முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் அங்கே இருப்​பான். அந்த நம்​பிக்​கையோடு வாருங்​கள். உலக கதவு​களை திறந்​து, சக தமிழர்​களை வளர்க்​கும் வகை​யில் இங்குள்ள வேலை​வாய்ப்​பு​கள் பற்​றி, தமிழகத்​தில் இருக்​கும் நமதுஇளைஞர்​களுக்கு எடுத்​துக் கூறவேண்​டும்.

தமிழர்​களின் வரலாறு, பண்​பாட்டை வெளிக்​காட்ட, கீழடியை தொடர்ந்​து, பொருநை அருங்​காட்​சி​யகம், கங்​கை​கொண்ட சோழபுரம் அருங்​காட்​சி​யகம் என்று அமைத்து வரு​கிறோம். குழந்​தைகளுக்கு அதை சுற்​றிக் காண்​பித்​து,நமது வரலாற்றை எடுத்​துக் கூறவேண்​டும். பழம்​பெருமை மட்​டுமின்​றி, நாம் எவ்​வளவு வலிகள், வேதனை​களை கடந்து தலை நிமிர்ந்​துள்​ளோம் என்​ப​தை​யும் கூறவேண்​டும்.

எப்​போதும் தமிழர்​களுக்​குள் ஒற்​றுமை நில​வவேண்​டும். இந்த இனம் எப்​போதும் முன்​னேற்​றப் பாதை​யில் மட்​டுமே பயணிக்க வேண்​டும். அதற்​காகத்​தான் தமிழகத்​தில் ஏராள​மான திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறோம். வெளி​நாடு​வாழ் தமிழர்​களுக்கு பிரச்​சினை என்​றால் ஓடோடி வந்து உதவு​கிறோம்.

சாதி, மதம், ஏழை, பணக்​காரன் போன்ற வேறு​பாடு​கள், நம்மை பிரிப்​ப​தோடு, நமது இனத்​தையே வளர​வி​டாது. தமிழ் என்ற வேரில் வளர்ந்​திருக்​கும் நாம், நமது அடை​யாளத்தை ஒரு​போதும் மறக்க கூடாது. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

முதல்வர் தனது பயண நிறைவு குறித்து சமூக வலைதள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஜெர்​மனி​யில் தமிழர்​கள் அளித்த உற்​சாக வரவேற்​புடன் தொடங்​கிய ‘டிஎன் ரைசிங்’ பயணம், லண்​டன் மாநகரில் அவர்​கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த உள்​ளங்​களின் எண்​ணிலடங்கா நினைவு​களு​டன் தாயகம் திரும்​பு​கிறேன். இத்​தனை நாளும் சகோ​தர​னாய் என்னை கவனித்​துக்​கொண்ட புலம்​பெயர்ந்த தமிழ் சமூகத்​துக்கு என் அன்​பை நன்​றி​யாய்​ நவில்​கிறேன்​. இவ்​வாறு முதல்​வர்​ தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x