Published : 07 Sep 2025 12:00 AM
Last Updated : 07 Sep 2025 12:00 AM

செங்கோட்டையனின் கருத்தை வரவேற்கும் அதிமுக தொண்டர்கள்: என்ன செய்யப் போகிறார் பழனிசாமி?

சென்னை: தமிழகத்​தில் கட்சி தொடங்கி 53 ஆண்​டு​களை கடந்த அதி​முக, 31 ஆண்​டு​களுக்கு மேல் ஆட்​சி​யில் இருந்​துள்​ளது. அடுத்​தடுத்து ஆட்​சியை பிடித்த ஒரே கட்​சி​யும் அதி​முக தான். கட்​சியை கைப்​பற்​றிய பழனி​சாமி, உட்​கட்சி விவ​காரத்​தில் நீதி​மன்​றத்​தில் தொடர் வெற்​றியை பெற்​றாலும், பொதுத் தேர்​தல்​களில் தோல்வி முகமே மிஞ்​சி​யது. 2024 தேர்​தலில் ஒரு தொகு​தி​யிலும் வெற்​றி​பெற முடிய​வில்​லை.

மேலும் அன்​வர் ராஜா, வா.மைத்​ரேயன் உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் கட்​சியி​லிருந்து வெளி​யேறி வரு​கின்​றனர். கட்சி பிரிந்து கிடப்​பதே அதி​முக​வின் தோல்விக்கு காரணம். கட்சி ஒன்​றிணைந்​தால் மட்​டுமே திமுகவை வீழ்த்த முடி​யும் என முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், சசிகலா ஆகியோர் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இதற்​கெல்​லாம் பிடி​கொடுக்​காத பழனி​சாமி, கட்​சியை ஒன்​றிணைக்​காமலேயே 2026-ல் அதி​முக ஆட்​சியை பிடிக்க கடந்த ஜூலை மாதமே தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​விட்​டார். இந்​நிலை​யில் ஈரோடு, கோபிச்​செட்​டி​பாளை​யத்​தில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன், "கட்​சியி​லிருந்து வெளியே சென்​றவர்​களை 10 நாட்​களுக்​குள் இணைக்க வேண்​டும். இல்​லா​விட்​டால், அவர்​களை இணைத்து கட்​சியை ஒன்​று​படுத்த நான் பாடு​படு​வேன்" என தெரி​வித்​துள்​ளார். இவரது கருத்​துக்கு சசிகலா, பன்​னீர்​செல்​வம் ஆகியோர் ஆதரவு தெரி​வித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் நேற்று செங்​கோட்​டையனின் மாவட்ட செய​லா​ளர் பதவி மற்​றும் அமைப்பு செய​லா​ளர் பதவி​களை பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பறித்​துள்​ளார். மேலும் அவரது ஆதர​வாளர்​கள் 7 பேரின் பதவி​களை​யும் பறித்தார். இதைத் தொடர்ந்து செங்​கோட்​டையனின் ஆதர​வாளர்​கள் முன்​னாள் எம்​.பி. சத்​ய​பாமா உள்​ளிட்ட 100-க்​கும் மேற்​பட்​டோர், தங்​களை​யும் கட்சி பதவி​களில் இருந்து நீக்​கு​மாறு பழனி​சாமிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர். மேலும் கட்​சி​யின் அண்​மைக்​கால போக்கு பிடிக்​காமல், தமிழகம் முழு​வதும் கட்சி பணி​களில் இருந்து வில​கி​யுள்ள அதி​முக​வினர் செங்​கோட்​டையனின் வலி​யுறுத்​தலுக்கு பலம் சேர்க்க குரல் கொடுத்து வரு​கின்​றனர்.

சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களைச் சேர்ந்த அதி​முக தொண்​டர்​கள் கூறியது: பழனி​சாமி தனது சுயநலத்​துக்​காகவே கட்சி ஒன்​றிணைப்​புக்கு மறுக்​கிறார். கட்சி நலனுக்​காக தனது பிடி​வாதத்தை தளர்த்த வேண்​டும். எதற்​கெடுத்​தா​லும், அம்​மா​வின் அரசு, எனது தலை​மையி​லான அம்​மா​வின் அரசு என்​றெல்​லாம் பேசி வரும் பழனி​சாமி, ஜெயலலி​தாவுக்கு வழங்​கப்​பட்ட நிரந்தர பொதுச்​செய​லா​ளர் பதவியை பறித்து தான் அதி​முக பொதுச்​செய​லா​ள​ராக இருந்து வரு​கிறார்.

இச்​செயலுக்கு முன்​பு, சசிகலா, ஓபிஎஸ், செங்​கோட்​டையனின் நடவடிக்​கைகள் ஒன்​றுமே இல்​லை. 2026 தேர்​தலில் வெற்றி பெற கட்சி ஒன்​றிணைப்பு அவசி​யம். செங்​கோட்​டைையனின் கோரிக்​கையை பரிசீலிக்க வேண்​டும். இவ்வாறு கூறினர். செங்​கோட்​டையனின் விதித்​திருக்​கும் காலக்​கெடு தொடர்​பாக பழனி​சாமி ஆதர​வாளர்​கள் கூறும்​போது, "ஓ.பன்​னீர்​செல்​வம், சசிகலா ஆகியோ​ருக்கு அதி​முக​வில் இடமில்லை என்​ப​தில் பழனி​சாமி உறு​தி​யாக உள்​ளார்.

அவர்​கள் இல்​லாமலேயே 2026 தேர்​தலில் அதி​முக​வின் வெற்​றியை பழனி​சாமி நிலை​நாட்​டு​வார். அதி​முக பல சோதனை​களை கடந்​து, இன்​றும் உயிர்ப்​போடு இருக்​கிறது. இத்​தனை ஆண்​டு​களாக கட்சி ஒற்​றுமையை வலி​யுறுத்தி தர்​ம​யுத்​தம் செய்து வந்த பன்​னீர்​செல்​வத்​தின் நிலை, தி​முக​விடம் தஞ்​சமடை​யும் அளவுக்கு சென்​று​விட்​டது. செங்​கோட்​டையனின் கெடு​வை, பழனி​சாமி பொருட்​படுத்த மாட்​டார். அவர் வகுத்​துள்​ள வழி​யில்​ அவர்​ பயணத்​தை, தொடர்​வார்​" என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x