Published : 07 Sep 2025 12:34 AM
Last Updated : 07 Sep 2025 12:34 AM

காஞ்சி சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வாங்கிய சசிகலா: சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தகவல்

சென்னை: பணம​திப்​பிழப்பு காலத்​தில் காஞ்​சிபுரத்​தில் சர்க்​கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்​கி​யிருந்​த​தாக சிபிஐ பதிவு செய்​துள்ள எப்​ஐஆரில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பழைய சீவரத்​தில் உள்ள பத்​மாதேவி சுகர்ஸ் லிமிட்​டெட் என்ற சர்க்​கரை ஆலை, இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யில் ரூ.120 கோடி ரூபா​யும், மற்ற வங்​கி​கள், நிதி நிறு​வனங்​களில் கோடிக்​கணக்​கான ரூபாயை கடனாகப் பெற்​றுள்​ளது. இந்த கடன்​களுக்கு அடமான​மாக வைக்​கப்​பட்​டிருந்த ஆலை இயந்​திரங்​களை, கடன் கொடுத்த வங்​கி​களுக்கு தெரி​யாமல் விற்​று, தனி​யார் சர்க்​கரை ஆலை மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக நிதி நிறு​வனம் ஒன்று சிபிஐ​யில் புகார் அளித்​தது.

உயர் நீதி​மன்​றம் உத்​தர​வின்​பேரில் பத்​மாதேவி சுகர்ஸ் லிமிட்​டெட் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​து, இந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை திரட்​டும் வகை​யில், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்​னை, திருச்​சி, தென்​காசிஉள்​ளிட்ட 6 இடங்​களில் சோதனைநடத்​தி​யது. இந்​நிலை​யில், சிபிஐ-​யின் முதல் தகவல் அறிக்கை தற்​போது வெளி​யாகி உள்​ளது.

அதில், ஜெயலலி​தா​வின் நெருங்​கிய தோழி​யான வி.கே.சசிகலா பணம​திப்​பிழப்பு காலத்​தில் ரூ.450 கோடி பழைய ரூ.500, ரூ.1000 ரொக்​கம் கொடுத்து அந்த சர்க்​கரை ஆலையை வாங்​கி​யிருப்​ப​தாக​வும், அது பினாமி பெயரில் இருப்​ப​தாக​வும் தெரிய​வந்​துள்​ள​தாக கூறி​யுள்​ளது. பத்​மாவதி சுகர்ஸ் நிறு​வனத்​தின் நிதி மேலாண்​மை​யில் இருந்த ஹிதேஷ் ஷிவ்​கன் படேல்,சர்க்​கரை ஆலையை விற்​பனை செய்​வதற்​காக ரூ.450 கோடிபெற்​ற​தாக​வும், அதற்​காக ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​ட​தாக​வும் சிபிஐ எப்​ஐஆரில் கூறப்​பட்​டுள்​ளது.

புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யிலும், அந்த சர்க்​கரை ஆலையை சசிகலா பினாமி பெயரிலேயே வைத்​திருந்​தது தெரிய​வந்​துள்​ள​தாக 2020-ம் ஆண்டு வரு​மான வரித்​துறை எப்​ஐஆரை மேற்​கொள் காட்டி சிபிஐ குறிப்​பிட்​டுள்​ளது. இதனால், வரு​மானவரித் துறை அந்த ஆலையை பினாமி சொத்து என்று அறி​வித்​து, சசிகலாவை அதன் உண்​மை​யான உரிமை​யாள​ராகக் குறிப்​பிட்​ட​தாக​வும் இதனிடையே, இந்​தி​யன் ஓவர்​சிஸ் வங்​கி​யும், பத்​மாவதி சுகர்ஸ் நிறு​வனத்​தின் கடன் கணக்​கு​களை மோசடி என்று அறி​வித்​த​தாக​வும் சிபிஐ தெரி​வித்​துள்​ளது.

இதையடுத்​து, ஹிதேஷ் ஷிவ்​கன் படேல், தினேஷ் படேல், தம்​பூ​ராஜ் ராஜேந்​திரன், பாண்​டிய ராஜ், நிதி அதி​காரி வெங்கட பெரு​மாள் முரளி ஆகியோர் மீது மோசடி உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக சிபிஐ குறிப்​பிட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x