Published : 07 Sep 2025 12:29 AM
Last Updated : 07 Sep 2025 12:29 AM

லண்டன் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அம்பேத்கர் தங்கிய இல்லத்தையும் பார்வையிட்டார்

சென்னை: லண்​டன் பயணத்​தின் ஒருபகு​தி​யாக மாமேதை கார்ல் மார்க்ஸ் நினை​விடத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மரி​யாதை செலுத்​தி​யதுடன், அம்​பேத்​கர் தங்​கி​யிருந்தஇல்​லத்​தை​யும் பார்​வை​யிட்​டார்.

முதலீடு​களை ஈர்க்க ஜெர்​மனி மற்​றும் இங்​கிலாந்து நாடு​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அரசு​முறை பயண​மாக சென்​றுள்​ளார். இங்​கிலாந்து தலைநகர் லண்​டனில் பல்​வேறு நிகழ்​வு​களில் பங்​கேற்​றுள்ள முதல்​வர் ஸ்டா​லின், நேற்​று​முன்​தினம் ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் தமிழ்​மேதை ஜி.​யு.​போப் கல்​லறை​யில் மரி​யாதை செலுத்​தி​னார். அப்​போது அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘ஆக்​ஸ்​போர்​டு சென்று விட்டு அங்கு உறங்​கும் தமிழ் மாணவரை போற்​றாமல் வரு​வது அறமாகுமோ?’ என தெரி​வித்​திருந்​தார்.

தொடர்ந்​து, மாமேதை கார்ல் மார்க்ஸ் நினை​விடத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மரி​யாதை செலுத்​தி​னார். இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘தத்​து​வ​ஞானிகள் இது​வரை உலகைப் பல வகை​களில் விளக்​கி​யுள்​ளனர்; ஆனால் உழைக்​கும் வர்க்​கத்​துக்கு ஒளி வழங்​கிய சிவப்​புச் சூரிய​னாம் மாமேதை கார்ல் மார்க்ஸ் நினை​விடத்​தில் செவ்​வணக்​கம் செலுத்​தினேன்' என தெரி​வித்​துள்​ளார்.

மேலும், அண்​ணல் அம்​பேத்​கர் லண்​டனில் படிக்​கும்​போது தங்​கி​யிருந்த இல்​லத்தையும் அவர் பார்​வை​யிட்​டார். அதுகுறித்து அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பாபா​சாகேப் அண்​ணல் அம்​பேத்​கர் லண்​டன் பொருளியல் பள்​ளி​யில் (LSE) படிக்​கும்​போது, தங்​கி​யிருந்த டாக்​டர் பி.ஆர். அம்​பேத்​கர்இல்​லத்​தைப் பார்​வை​யிடும் வாய்ப்​பைப் பெற்​றேன். இந்​தி​யா​வில் சாதி​யின் பெயரால் ஒடுக்​கப்​பட்ட ஓர் இளைஞன், இங்​கு​தான் தனது அறி​வால் வளர்ந்​து, லண்​டனில் அனை​வரது மரி​யாதையை​யும் பெற்​று, பின்​னர் இந்​தி​யா​வின் அரசி​யலமைப்​பையே வடித்​துத் தரும் நிலைக்கு உயர்ந்​தார்’’ என தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x