Published : 06 Sep 2025 06:15 AM
Last Updated : 06 Sep 2025 06:15 AM

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: பெண்ணின் தந்தை உட்பட மூவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

திருவள்ளூர்: ​காதல் திருமண விவ​காரத்​தில் சிறு​வன் கடத்​தப்​பட்ட வழக்​கில் பெண்​ணின் தந்தை உட்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நேற்று முன் தினம் திரு​வள்​ளூர் மாவட்ட விரைவு நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வாலங்​காட்டை அடுத்த களாம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவ​காரத்​தில் தனுஷின் 17 வயது தம்பி கடந்த ஜூன் 6-ம் தேதி நள்​ளிர​வில் கடத்​தப்​பட்​டார்.

இச்​சம்​பவம் தொடர்​பாக கைதான 7 பேரில், விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, உறவினர்​கள் கணேசன், மணி​கண்​டன் ஆகியோர், திரு​வள்​ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஜாமீன் கேட்டு 3 முறை மனு தாக்​கல் செய்​திருந்​தனர். அந்த மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்பட்​டன.

இந்​நிலை​யில், 4-வது முறை​யாக வனராஜா, கணேசன், மணி​கண்​டன் ஆகிய 3 பேரும் திரு​வள்​ளூர் நீதித்​துறை நடு​வர் -1 நீதி​மன்​றத்​தில் ஜாமீன் கேட்டு மனு தாக்​கல் செய்​திருந்​தனர். அந்த மனுவை விசா​ரித்த, மாவட்ட விரைவு நீதி​மன்ற நீதிப​தி, வனராஜா உள்​ளிட்ட 3 பேருக்கு கடந்த ஆக. 8-ம் தேதி ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், சிபிசிஐடி போலீ​ஸார், “வன​ராஜா, கணேசன், மணி​கண்​டன் ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க வேண்​டும் என்​றால் அவர்​கள் 90 நாட்​கள் நீதி​மன்ற காவலில், சிறை​யில் இருந்​திருக்க வேண்​டும். ஆனால், வனராஜா உள்​ளிட்​டோர் 60 நாட்​கள் சிறை​யில் இருந்த நிலை​யில், அவர்​களுக்கு ஜாமீன் வழங்​கப்​பட்​டுள்​ளது.

ஆகவே, அவர்​களுக்கு வழங்​கப்​பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்​டும்” என, திரு​வள்​ளூர் ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள மாவட்ட விரைவு நீதி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​தனர். அந்த மனு மீதான விசா​ரணை நேற்று முன் தினம் நடை​பெற்​றது. அதன் முடி​வில், வனராஜா, கணேசன், மணி​கண்​டன் ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்ட ஜாமீனை ரத்து செய்​து மாவட்​ட விரைவு நீதிமன்​ற நீதிபதி உத்​தரவிட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x