Published : 06 Sep 2025 07:06 AM
Last Updated : 06 Sep 2025 07:06 AM

அமெரிக்க அரசின் வரி விதிப்பை கண்டித்து: தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து, சென்னையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். | படம்: எல்.சீனிவாசன் |

சென்னை: அமெரிக்க அரசின் வரி விதிப்பை கண்​டித்து தமிழகம் முழு​வதும் இடது​சாரி கட்​சிகள் சார்​பில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்​திய பொருட்​களுக்​கான 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், நாட்​டின் சுய​சார்​பு, ஏற்​றுமதி தொழில்​கள், தொழிலா​ளர்​களின் வேலை​வாய்ப்பை பாது​காக்க வலி​யுறுத்​தி​யும் இடது​சாரி கட்​சிகள் சார்​பில் சென்னை, காஞ்​சிபுரம், கோவை, திருப்​பூர் உட்பட தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்றது.

சென்​னை​யில் நடந்த போராட்​டத்​துக்கு சிபிஐ மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன், சிபிஎம் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், சிபிஎம்​எல் மாநில செய​லா​ளர் பழ.ஆசைத்​தம்பி ஆகியோர் தலைமை வகித்​தனர்.

ஆர்ப்​பாட்​டம் குறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது:

இரா.​முத்​தரசன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்​றும் பிரதமர் மோடி இரு​வரும் ஒரு​வருக்​கொரு​வர் மாறி​மாறி தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​தனர். ஆனால் இவர்​களது நட்பு இந்​தி​யா​வுக்கு பலனளிக்​க​வில்​லை. ஒரு சுயச்​சார்​புள்ள நாடு மற்​றொரு நாட்​டோடு உறவு வைத்​துக் கொள்​வது அந்​நாட்​டின் இறை​யான்​மை.

ஆனால் அமெரிக்க அதிபர், தான் சொல்​கிற நாடு​களிடம் மட்​டும்​தான் வர்த்​தகம் செய்ய வேண்​டுமென்று சட்​டாம்​பிள்​ளைத்​தன​மாக கூறுகிறார். அமெரிக்​கா​விடம் இந்​தியா சரணாகதி அடை​யாமல், இடது​சா​ரி​கள் உள்​ளிட்ட பிற கட்​சிகளோடு கலந்து பேசி மாற்​றுக் கொள்​கையை உரு​வாக்கி இந்​திய தொழில்​களை, தொழிலா​ளர்​களை பாது​காக்க வேண்​டும்.

பெ.சண்​முகம்: டிரம்ப் என்ற தனி நபரின் விருப்​புவெறுப்​பால் விதிக்​கப்​பட்​டுள்ள வரி​யால் பல நாடு​களில் உள்ள லட்​சக்​கணக்​கான முதலா​ளி​கள், தொழிலா​ளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தியா முழு​வதும் ஏராள​மான வேலை​யிழப்பு ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் திருப்​பூர் ஜவுளி உற்​பத்​தி நெருக்​கடிக்கு உள்​ளாகி உள்​ளது.

ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், வேலூர் மாவட்​டங்​களில் தோல் தொழில் முடங்​கும் நிலை உள்​ளது. ஆண்​டுக்கு ரூ.1000 கோடிக்கு ஏற்​றுமதி செய்​யப்​பட்ட முந்​திரி தொழிலில் உள்ள விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இவற்றை சரிசெய்ய அவசர உணர்​வுடன் ஆக்​கப்​பூர்​வ​மாக மத்​திய அரசு செயல்பட வேண்​டும்.
இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x