Published : 06 Sep 2025 06:26 AM
Last Updated : 06 Sep 2025 06:26 AM

சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது: மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கக் கூடாது - நயினார் நாகேந்திரன்

சென்னை: சென்​னை​யில் தூய்மை பணி​யாளர்​கள் கைது சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன், மக்​களின் ஜனநாயக உரிமை​களை முடக்க யார் அதி​காரம் கொடுத்​தது என கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சென்​னை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்​பு, திமுக கொடுத்த வாக்​குறு​தி​யின் ​படி தங்​களின் நியாய​மான கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி 14 நாட்​கள் போராட்​டம் நடத்​திய தூய்​மைப் பணி​யாளர்​களைக் கொஞ்​சம் கூட மனிதத் தன்​மை​யின்றி தாக்கி அவர்​களைத் தடாலடி​யாக அப்​புறப்​படுத்​தி​யது ஆளும் திமுக அரசு.

இருந்​தா​லும் மனம் தளராது தங்​களு​டைய வாழ்​வா​தா​ரத்​துக்​கான போராட்​டத்தை மீண்​டும் அறவழி​யில் தொடர்​வது குறித்து ஆலோ​சிப்​ப​தற்​காக சென்னை சிந்​தா​திரிப்​பேட்டை உழைப்​பாளர் தினப் பூங்​கா​வில் கூடிய தூய்​மைப் பணி​யாளர்​களின் மீது திமுக அரசு மீண்​டும் அடக்​கு​முறையை ஏவி அவர்​களைக் கைது செய்​துள்​ளது.

அங்கே செய்தி சேகரிக்​கச் சென்ற ஊடகத்​தினரை​யும் தரக்​குறை​வாக நடத்​தி​யதோடு, இதுகுறித்து புகார் அளிக்கச் சென்​ற​தால் கைது செய்​து​ விடு​வ​தாக​வும் மிரட்​டி​யுள்​ளது. ஆளும் அரசின் இந்த அதி​காரத் துஷ்பிரயோகத்தை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன்.

மக்​களின் ஜனநாயக உரிமை​களை முடக்​கு​வதற்கு யார் அதி​காரம் கொடுத்​தது, இது​தான் திமுக​வின் சமூகநீ​தி​யின் லட்​சண​மா, ஆளும் அரசு தனது அராஜகப் போக்​கால் அழிவை நோக்​கிப் பாய்ந்து கொண்​டிருக்​கிறது. அனைத்​துக்​கும் கூடிய விரை​வில் முடிவு கட்​டப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x