Published : 06 Sep 2025 08:58 AM
Last Updated : 06 Sep 2025 08:58 AM

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..! - சரத்குமாரை தூண்டிவிட்டு பாண்டியராஜனுக்கு பள்ளம் பறிக்கிறாரா பாலாஜி?

ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன், சரத்குமார்

2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜியோ, “விருதுநகரை கேட்டு வாங்குங்கள்; உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன்” என்று பாஜக-வில் இருக்கும் நடிகர் சரத்குமாரை கொம்பு சீவுவதாகச் சொல்கிறார்கள்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதி​முக எல்​லைக்​குள் உள்ள விருதுநகர் தொகு​தி​யில் மாஃபா பாண்​டிய​ராஜனும், ராஜ​பாளை​யம் தொகு​தி​யில் பாஜக சார்​பில், முன்​னாள் அதி​முக எம்​எல்​ஏ-​வான கோபால்​சாமி​யும் போட்​டி​யிட ஆயத்​த​மாகி வரு​கி​றார்​கள். இவர்​கள் இரு​வரை​யுமே தனக்கு ஆகாது என்​ப​தால் ஒரே கல்​லில் ரெண்டு மாங்​காய் அடிக்க ஆயத்​த​மாகி வரு​கி​றார் ராஜேந்​திர பாலாஜி.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட அதி​முக மூத்த நிர்​வாகி​கள் சிலர், “மாஃபா பாண்​டிய​ராஜன் சென்​னையை விட்​டு​விட்டு மீண்​டும் விருதுநகர் அரசி​யலுக்கு திரும்​பியது ராஜேந்​திர பாலாஜிக்கு பிடிக்​கவே இல்​லை. அதனால் அவருக்கு எதி​ராக பொது​வெளி​யிலேயே வார்த்தைகளில் மறை​முக​மாக வெடித்​தார் பாலாஜி. இது தொடர்​பாக கட்​சித் தலைமை அவரை அழைத்து கண்​டித்​ததும், ‘நான் பாண்​டிய​ராஜனைக் குறிப்​பிட்​டுப் பேச​வில்​லை’ என மறுத்​தார். பாலாஜி இப்​படி மிரட்​டல் தொனி​யில் பேசி​யது பாண்​டிய​ராஜனுக்கு தொழில் ரீதி​யாக​வும் சில சங்கடங்களை ஏற்​படுத்​தி​யது.

இந்த நிலை​யில், கீழடி அகழாய்வு அறிக்கை திருப்பி அனுப்​பப்பட்ட விவ​காரத்தில் அதி​முக-வை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது. அதற்கு, அதிமுக ஆட்​சியில் தொல்​லியல் துறையை கையில் வைத்​திருந்த பாண்​டிய​ராஜன் மூலம் பதிலடி கொடுத்தார் இபிஎஸ். திமுக-வின் கேள்விகளுக்கு புள்ளி விவரத்​துடன் பாண்​டிய​ராஜன் அளித்த பதி​லும், அவர் எழுப்பிய எதிர் கேள்வி​களும் திமுக-​வினரின் வாயை அடைத்தது. இந்த நிலை​யில், அண்​மையில் விருதுநகர் மாவட்​டத்​துக்கு இபிஎஸ் பிரச்​சாரப் பயணம் வந்த போது பாண்​டிய​ராஜன் கலந்​து​கொள்​ள​வில்லை.

பாண்​டிய​ராஜனைப் போலவே அதி​முக-வில் ராஜேந்திர பாலாஜியால் ஓரம்​கட்​டப்​பட்​டவர் கோபால்​சாமி. அதனால் பாஜக-வில் இணைந்து இப்போது மாநில துணைத் தலை​வராக இருக்​கி​றார். இவர் இம்முறை ராஜ​பாளை​யத்தில் போட்​டியிட தனது நண்பர் நயினார் மூலம் முயன்று வரு​கி​றார். இதையும் விரும்பாத பாலாஜி, ராஜ​பாளை​யத்​துக்குப் பதிலாக பாஜக-வுக்கு விருதுநகர் தொகுதியை ஒதுக்​கி​விட்டால் பாண்​டிய​ராஜன், கோபால்சாமி இரு​வ​ருக்குமே சீட் கிடைக்​காமல் செய்​து​விடலாம் என கணக்குப் போடு​கி​றார்.

அதனால், மக்களவை தேர்​தலில் உங்கள் மனைவி ராதிகாவை விருதுநகரில் நிறுத்​தியது போல் இம்முறை விருதுநகர் சட்​டமன்றத் தொகு​தியில் நீங்களே போட்​டி​யிடுங்கள் என நடிகர் சரத்​கு​மாரிடம் பாலாஜி பேசிவ​ரு​வ​தாகச் சொல்​கி​றார்கள். ஆனால், விருதுநகரை பாண்​டிய​ராஜனுக்கும் ராஜபாளை​யத்தை கோபால்​சாமிக்கும் ஒதுக்​கா​விட்டால் இரண்டு தொகு​தி​களையுமே திமுக கூட்டணி தான் கைப்​பற்றும் என்பதே கள நில​வரம்” என்​றனர்.

இதனிடையே, பொது​வெளி​யில் ராஜேந்​திர பாலாஜி மீண்​டும் தன்னை அவமானப்​படுத்​தி​விடக் கூடாது என்​ப​தற்​காகவே மாஃபா பாண்​டிய​ராஜன் இபிஎஸ் பிரச்​சா​ரப் பயணத்​தில் கலந்​து​கொள்​ளாமல் நாகரி​க​மாக தவிர்த்​த​தாக​வும் ஒரு பேச்சு இருக்​கிறது.

இது குறித்து மாஃபா பாண்​டிய​ராஜனிடம் கேட்​டதற்​கு, “எனது நிறு​வனத்​தின் அடுத்​தகட்ட செயல்​பாடு​கள் தொடர்​பாக மும்​பை​யில் முக்​கிய​மான பணி​யில் இருந்​த​தால் எடப்​பாடி​யா​ரின் பிரச்​சார பயணத்​தில் என்​னால் கலந்து கொள்ள முடிய​வில்​லை. இதுகுறித்து அவரிடம் முன்​கூட்​டியே தெரிவித்​து​விட்​டேன். அவரும் தொழிலைக் கவனிக்​கும்​படி அறி​வுரை சொன்​னார். ஓரிரு வாரங்​களில் விருதுநகர் திரும்​பியதும் வழக்​கம் போல் கட்சிப் பணி​களில் முழு​மூச்​சுடன் ஈடு​படு​வேன்” என்​றார்.

இம்​முறை ராஜ​பாளை​யத்​தில் போட்​டி​யிடு​வது உறு​தி​தானே என பாஜக துணை தலை​வர் கோபால்​சாமி​யிடம் கேட்​டதற்​கு, “எங்​களுக்கு வெற்றி வாய்ப்​புள்ள தொகு​தி​களில் கூடு​தல் கவனம் செலுத்தி வரு​கி​றோம். ராஜ​பாளை​யத்​தில் நான் எம்​எல்​ஏ-​வாக இருந்​த​போது செய்​து​முடித்த பணி​கள் இன்​ன​மும் மக்​களிடையே பேசப்​படு​கிறது. கூட்​ட​ணி​யில் தொகுதி பங்​கீடு முடிந்த பிறகு, ராஜ​பாளை​யத்​தில் யார் போட்​டி​யிடு​வார் என்​பதும் முடிவாகும்” என்​றார்.

மாஃபா பாண்​டிய​ராஜனும் கோபால்​சாமி​யும் தங்​களது கட்சி தலை​மை​கள் உத்​தர​வாதம் அளித்த பிறகே விருதுநகரிலும் ராஜ​பாளை​யத்​தி​லும் தேர்தல் பணி​களை தீவிரப்​படுத்தி வரு​கி​றார்​கள். அப்​படி இருக்​கை​யில், ராஜேந்​திர பாலாஜி​யின் ‘ரெண்டு மாங்​காய்’ திட்​டம் கைகூடுமா என்​பதை பொறுத்​திருந்து தான் பார்​க்க வேண்​டும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x