Published : 06 Sep 2025 07:28 AM
Last Updated : 06 Sep 2025 07:28 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 23,300 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 30,800 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக நேற்று காலை முதல் மீண்​டும் உபரிநீர் காவிரி​யில் திறந்​து​விடப்​பட்டு வரு​கிறது. நீர்​மின் நிலை​யங்​கள் வழி​யாக 22,500 கனஅடி​யும், 16 கண் மதகு​கள் வழி​யாக 7,500 கனஅடி​யும் திறக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, கால்​வாய் பாசனத்​துக்கு 800 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த 4 நாட்​களாக அணை​யின் நீர்​மட்​டம் 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் தொடர்​கிறது.தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை 18,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 32 ஆயிரம்​ கனஅடி​யாக அதிகரித்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x