Published : 06 Sep 2025 06:18 AM
Last Updated : 06 Sep 2025 06:18 AM

ராமதாஸின் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப் போவதில்லை: அன்புமணி திட்டவட்டம்

மாமல்லபுரம்: ​பாமக நிறு​வனர் ராம​தாஸ் எழுப்​பிய 16 கேள்வி​களுக்கு எந்த பதிலை​யும் தெரிவிக்​கப்​போவ​தில்லை என அக்​கட்சியின் தலை​வர் அன்​புமணி கூறியுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மாமல்​லபுரம் அருகே சூளேரிக்​காடு பகு​தி​யில் உள்ள தனி​யார் பண்ணை வீட்​டில் பாமக தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் மாவட்ட செய​லா​ளர்​கள் மற்​றும் மாவட்ட தலை​வர்​கள் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது.

இதில், கட்சி விதி​களை மீறி செயல்​பட்​ட​தாக 16 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்​டும் என ராம​தாஸ் தரப்​பிலிருந்​து, அன்புமணியிடம் விளக்​கம் கேட்டு கடிதம் அனுப்​பப்​பட்​டது. இதற்கான காலக்கெடு, கடந்த ஆக. 31-ம் தேதி​யோடு நிறைவடைந்த நிலை​யில், 10-ம் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்​கு​வ​தாக ராம​தாஸ் தெரி​வித்​திருந்​தார்.

இதுகுறித்​து, மாவட்ட செய​லா​ளர்​கள் மற்​றும் மாவட்ட தலை​வர்​கள் கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதில் ராமதாஸ் எழுப்​பி​யுள்ள எந்த கேள்வி​களுக்​கும் பதில் அளிக்​கப்​போவ​தில்லை என அன்​புமணி தெரி​வித்​ததாக கூறப்​படு​கிறது. மேலும், அன்​புமணி​யின் நடைபயணம், வரும் சட்​டப்​பேரவை தேர்​தல் கூட்​ட​ணி, கட்​சி​யின் வளர்ச்சி பணி​கள் மற்​றும் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் குறித்து ஆலோ​சனை நடத்​தப்​பட்​ட​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இக்​கூட்​டத்​தில் பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பா​மா, தலைமை நிலைய செய​லா​ளர் செல்​வக்​கு​மார், மாநில தேர்​தல் பணிக்​குழு செய​லா​ளர் ஜெய​ராமன், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் மயிலம் சிவக்​கு​மார், தர்​மபுரி வெங்​கடேசன், மேட்​டூர் சதாசிவம் உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x