Published : 06 Sep 2025 05:46 AM
Last Updated : 06 Sep 2025 05:46 AM

தினகரன், ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்கு திரும்புவார்கள்: அண்ணாமலை நம்பிக்கை

சென்னை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் மீண்​டும் இணை​வார்​கள் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

சென்னை தியாக​ராய நகரில் நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற தனி​யார் நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட அண்​ணா​மலை, செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் கூறி​யுள்​ளார்.

அவர் தனது முடிவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்று தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு வேண்​டு​கோள் விடுத்துள்ளேன். இது​போல அவரது கட்​சி​யிலும் பலர் அவரிடம் கூறி​யுள்​ளனர். அதே​போல, ஓபிஎஸ்​ஸும் தனது முடிவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும்.

அவர்​கள் இரு​வரும் எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் கடந்த 2024-ல் கூட்​ட​ணிக்கு வந்​தவர்​கள். எனவே, நிச்​ச​யம் மறு​பரிசீலனை செய்​வார்​கள் என்ற நம்​பிக்கை உள்​ளது. அவர்​கள் விஜய் கட்​சியை நோக்கி செல்ல வாய்ப்பு இருக்​கிறதா என்று கேட்​கிறீர்​கள்.

ஊகங்​களுக்கு பதில் அளிக்க இயலாது. 2026 தேர்​தலில் விஜய் தாக்​கத்தை ஏற்​படுத்​து​வார். அதில் மாற்​றுக் கருத்து இல்​லை. ஆனால், தே.ஜ. கூட்​ட​ணி​தான் ஆட்சி அமைக்​கும் என்​பது எனது நம்​பிக்​கை. 2026-ல் மக்​களுக்கு நல்​லாட்சி தரவேண்​டும் என்​பது​தான் தே.ஜ. கூட்​ட​ணி​யின் இலக்​கு. இந்த கூட்​டணி வலிமையடைந்து வரு​கிறது. இருக்​கும் ஒருசில பிரச்​சினை​களும் விரை​வில் களை​யப்​படும்.

பாஜக தலைமை மீது நான் அதிருப்​தி​யில் இருப்​ப​தாக கூறு​வது தவறான தகவல். டெல்​லி​யில் நடந்த கூட்​டத்​தில் என்​னால் பங்​கேற்க இயலாத காரணத்தை கட்சி தலை​வர்​களுக்கு முறைப்​படி தெரியப்​படுத்​தி​விட்​டேன். அமித் ஷாவிட​மும் தொலைபேசி மூலம் பேசினேன். தமிழக பாஜக​வில் உள்​கட்சி பூசல், சலசலப்பு ஏற்​பட்​டிருப்​ப​தாக மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறியது குறித்து கேட்​கிறீர்​கள்.

நான் அரசி​யலில் சில விஷ​யங்​களை கடந்து செல்​லக் கூடிய​வன். மாற்​றம் வேண்​டும் என இங்கு இருக்​கிறேன். அதனால், நான் செய்ய வேண்​டிய வேலைகள் கொஞ்​சம் வித்​தி​யாச​மாக இருக்​கும். அதில் சில தலை​வர்​களுக்கு மாற்​றுக் கருத்​தும் இருக்​கலாம். அவர்​கள் பேசுவதற்​கும் உரிமை இருக்​கிறது. அரசி​யலில் எப்​போதும் எல்​லோருக்​கும் நல்​ல​வ​னாக இருக்​க முடி​யாது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x