Published : 06 Sep 2025 05:20 AM
Last Updated : 06 Sep 2025 05:20 AM

396 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர் தினத்தையொட்டி உதயநிதி வழங்கினார்

பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், துறை செயலாளர் சந்திரமோகன், மேயர் பிரியா உள்ளிட்டோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: ஆசிரியர் தினத்​தையொட்​டி, தமிழகத்​தின் 396 ஆசிரியர்​களுக்கு டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். நாட்​டிலேயே தமிழகத்​தில் மட்​டும்​தான் 70 சதவீத மாணவர்​கள் உயர்​கல்வி படிக்க செல்​கின்​றனர். இதை ஆசிரியர்​கள் 100 சதவீத​மாக உயர்த்த வேண்​டும் என்று அவர் கேட்​டுக் கொண்​டார்.

முன்​னாள் குடியரசுத் தலை​வர் சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்​டம்​பர் 5-ம் தேதி ஆண்​டு​தோறும் ஆசிரியர் தினமாக கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, சிறந்த ஆசிரியர்​களை தேர்வு செய்து நல்​லாசிரியருக்​கான ‘டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுர​வப்​படுத்தி வரு​கிறது. விரு​தாளர்​களுக்கு ரூ.10,000 ரொக்​கம், வெள்​ளிப் பதக்கம், பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும்.

அதன்​படி, இந்த ஆண்​டில் மாநில நல்​லாசிரியர் விருதுக்கு 396 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். அவர்​களுக்கு விருது வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை விருந்​தின​ராக கலந்​து​கொண்​டு, அவர்களுக்கு விருது வழங்கி கவுர​வித்​தார். தவிர, ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூல​மாக பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு தேர்வான 2,810 பேருக்கு பணி நியமனம் வழங்​கு​வதன் அடை​யாள​மாக 40 பேருக்கு நியமன ஆணை​களை​யும் உதயநிதி வழங்கினார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: திரா​விட இயக்​கத்​துக்​கும், ஆசிரியர்​களுக்​கும் எப்​போதும் நெருங்​கிய தொடர்பு உண்​டு. பகுத்தறிவு, சுயமரி​யாதைக்​கான ஆசிரியர் பெரி​யார். ‘முரசொலி’யை தொடங்கி தன் வாழ்​நாள் முழு​வதும் ஆசிரிய​ராக இருந்​தார் கருணாநி​தி. அந்த வழி​யில், திரா​விட மாடல் என்ற மிகப்​பெரிய தத்​து​வத்​தின் ஆசிரிய​ராக செய​லாற்றி வரு​கிறார் முதல்​வர் ஸ்டாலின்.

ஆசிரியர்​களின் பல்​வேறு கோரிக்​கைகளை முதல்​வர் நிறைவேற்​றி​யுள்​ளார். மற்ற கோரிக்​கைகளை​யும் நிச்​ச​யம் நிறைவேற்வார்.கல்வி மூல​மாகவே சமூக மாற்​றத்தை கொண்​டுவர முடி​யும். அதி​காரமிக்க கல்​வியை மாணவர்​களுக்கு கொண்டு​போய் சேர்க்​கும் நீங்​கள் அனை​வரும் புரட்​சி​யாளர்​கள்​தான். அறி​வார்ந்த சமூகத்தை ஆசிரியர்​களால்​தான் உரு​வாக்க முடி​யும்.

எனவே, மாணவர்​களின் அறி​வியல் மனப்​பான்​மையை நீங்​கள் வளர்த்​தெடுக்க வேண்​டும். சமூக நீதி, பகுத்​தறிவை பயிற்​று​விக்க வேண்​டும். நாட்​டிலேயே தமிழகத்​தில் மட்​டும்​தான் 70 சதவீத மாணவர்​கள் உயர்​கல்வி படிக்க செல்​கின்​றனர். இதை ஆசிரியர்​கள் 100 சதவீத​மாக உயர்த்த வேண்​டும். ஆசிரியர்​களின் வளர்ச்​சிக்கு அரசு எப்​போதும் துணை நிற்​கும். நீங்​களும் அரசுக்கு அதிக ஆதரவை தரவேண்​டும்.

ஆசிரிய​ராக இருந்து குடியரசுத் தலை​வ​ராக உயர்ந்த டாக்​டர் ராதாகிருஷ்ணனுக்கு திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் சிலை அமைக்​கும் பணி விரை​வில் தொடங்​கப்பட உள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார். இந்த நிகழ்​வில் அமைச்​சர்​கள் அன்​பில் மகேஸ், மா.சுப்​பிரமணி​யன், சேகர்​பாபு, பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்கக்கல்வி இயக்​குநர் நரேஷ், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்​பினர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வர் வாழ்த்து: ஆசிரியர் தினத்தை முன்​னிட்டு முதல்​வர் ஸ்டா​லின் தனது சமூக வலைதள பதி​வில், ‘ஆசிரியர்​களை நம்​பித்​தான் பெற்​றோர் தங்​கள் பிள்​ளை​களை ஒப்​படைக்​கின்​றனர். பிள்​ளை​களும் பெற்​றோரை​விட ஆசிரியர்​கள் சொல்​வதையே அதி​கம் நம்​பு​கின்​றனர். அந்த மாணவர்​களுக்கு தமிழ், அறம், அரசி​யல், அறி​வியல் என அனைத்​தை​யும் கற்​பித்து அவர்​களது உயர்​வுக்​காக பாடு​படும் நல்​லாசிரியர்​கள் அனை​வருக்​கும்​ எனது ஆசிரியர்​ தின நல்​வாழ்த்​துகள்​’ என்​று தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x