Published : 06 Sep 2025 12:53 AM
Last Updated : 06 Sep 2025 12:53 AM

உலகின் அனைத்து நாடுகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இங்​கிலாந்​தின் ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் பெரி​யார் படத்தை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். உலகின் அனைத்து நாடு​களும் ஒடுக்​கப்​பட்ட விளிம்பு நிலை மக்​களுக்கு இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்று அவர் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின், ஐரோப்பிய பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியை தொடர்ந்து இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், உலகப் புகழ்​பெற்ற ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற சுயமரி​யாதை இயக்​கத்​தின் நூற்​றாண்டு விழா, கருத்​தரங்கு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார். பெரி​யார் உரு​வப்​படத்தை திறந்து வைத்​தார்.

வரலாற்று ஆய்​வாளர் ஆ.இ​ரா.வெங்க​டாசலபதி, முனை​வர் கார்த்திக் ராம் மனோகரன்தொகுத்​துள்ள ‘தி கேம்பிரிட்ஜ் கம்​பேனியன் டூ பெரி​யார்’ மற்றும் இளம் ஆய்​வாள​ரான விக்​னேஷ் கார்த்​திக் ஆய்​வு நடை​யில் வெளிப்​படுத்​தி​யுள்ள ‘தி டிர​விடியன் பாத்​வே’ என்ற நூலை​யும் வெளி​யிட்​டார். அப்​போது முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது:

ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் தந்தை பெரி​யார் படத்தை திறந்து வைத்​ததை, எனது வாழ்​நாள் பெருமையாக கருதுகிறேன். பெரி​யாரின் சிந்தனை​கள் எல்​லைகளுக்கு அப்​பாற்​பட்​டது. பகுத்​தறி​வும், அறிவியலும் ஒரே நேர்​கோட்​டில் இருக்​கும். அறி​வின் கூர்​மை​தான் பகுத்​தறிவு என்று எடுத்​துச் சொன்​ன​தால்​தான், அவர் மறைந்து இத்​தனை ஆண்​டு​கள் கழித்​தும் ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகம் அவரைப் பற்றி விவா​திக்​கிறது. கேம்​பிரிட்ஜ் பல்​கலைக்​கழகம் புத்​தகம் வெளி​யிடு​கிறது.

உலகம் எத்​தனையோ சிந்​தனை​யாளர்கள், சீர்​திருத்​த​வா​தி​களை பார்த்​திருக்​கிறது. எத்​தனையோ புரட்​சிகர​மான சிந்​தனை​களை அவர்​கள் பேசி​யிருக்​கிறார்கள். ஆனால், அந்த சிந்​தனை​களை செயல்​வடிவ​மாக்​கும் ஆட்​சி​யாளர்​கள் இருக்க மாட்டார்​கள்​. தமிழகத்​தில் மட்​டும்​தான், ஒரு சீர்​திருத்த இயக்​கம், அரசி​யல் இயக்​கமாக எழுச்சி பெற்​று, மக்களின் ஆதரவை வாக்​கு​களாக பெற்று, சீர்​திருத்த கருத்து​களை நடைமுறைப்​படுத்​தி, அவற்றை சட்​ட​மாகவும் ஆக்கி அந்​த சமு​தா​யத்தை மேன்​மையடைய வைத்துள்ளது.

நாடே வியந்து பார்க்​கும் அளவுக்கு கல்​வி, பொருளா​தா​ரம், தொழில், வாழ்க்கைத்​தரம், உள்​கட்டமைப்பு என அனைத்திலும் தமிழகம் முன்னேறியுள்ளது. இதுதான் திரா​விட இயக்​கத்தின் சாதனை.

பெரி​யார் கண்ட கனவு​கள் எல்​லா​வற்​றை​யும் நாம் நிறைவேற்​றி​விட்​டோம் என்று சொல்​ல​மாட்​டேன். பயணம் நெடியது. நாம் செல்ல வேண்​டிய தூரம் இன்னும் இருக்​கிறது. இந்​த பயணத்​தில் ஏற்​படும் தேக்​கங்​கள், தேவையற்ற இடைஞ்​சல்​கள், பழைய குளறு​படிகளை நாம் ஒதுக்​க வேண்​டும். போலி பெரு​மையில் சிக்கி மீண்டும் பின்​னோக்​கி போய்​விட கூடாது.

பெரி​யாரின் சிந்​தனை​கள் உலகம் முழுவதும் பரவ வேண்​டும். அனைத்து விதமான ஒடுக்​கு​முறை​களை​யும் களை​ய​வேண்​டும். சமூக உரிமை​கள் முதல் தனிமனித உரிமை​கள் வரை அனைத்​தும் நிலை​நாட்​டப்​பட​வேண்​டும்.

ஒவ்​வொரு பிரி​வினரின் உரிமை​யையும் இடஒதுக்​கீடு என்ற உரிமை மூல​மாக நிலை​நாட்டி உள்ளோம். அதே​போன்ற இடஒதுக்​கீட்​டு கொள்​கையை அனைத்து நாடு​களும், ஒடுக்​கப்​பட்ட விளிம்பு நிலை மக்​களுக்கு வழங்​கவேண்​டும். சமூக உரிமை​யில்​ அக்​கறை கொண்​ட அமைப்​புகள்​ இதை முன்​னெடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு முதல்வர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x