Published : 05 Sep 2025 02:35 PM
Last Updated : 05 Sep 2025 02:35 PM
சிவகங்கை: கச்சத்தீவு ராஜாங்க ரீதியாக கொடுக்கப்பட்டது. அதை திரும்பப் பெறுவது சரிவராது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதனால் பொருட்களின் விலை குறையும். எனினும், இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு. பண மதிப் பிழப்பு, கரோனா பரவல் காலத்தில் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. அப்போதே ஜிஎஸ்டி-யை குறைத்திருக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு வரி விலக்கு அளித்தது வரவேற்கத்தக்கது. வரி விலக்கு பட்டியலில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் தமிழகத் துக்கு அதிக முதலீடு வந்துள்ளது. பழனிசாமி ஆட்சி காலத்தில் வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தா லும், அது தோற்கும். பாஜகவை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். கச்சத்தீவு ராஜாங்கரீதியாக கொடுக்கப்பட்டது. அதை திரும்பப் பெறுவது சரி வராது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT