Published : 05 Sep 2025 05:36 AM
Last Updated : 05 Sep 2025 05:36 AM

ரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரி துறை சோதனை

சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்​து, தனி​யார் ரசாயன உற்​பத்தி நிறு​வனத்​தில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் 20-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் இந்த சோதனை நடந்​தது. சென்னை தியாக​ராய நகர் வடக்கு கிரசன்ட் சாலை​யில் உள்ள ஆர்க்​கியன் கெமிக்​கல் இண்​டஸ்ட் ​ரீஸ் லிமிடெட் என்ற நிறு​வனத்​தில் நேற்று காலை 10 மணி முதல் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

இதே​போல, வடபழனி, ஆழ்​வார்​பேட்​டை, எம்​ஆர்சி நகரில் உள்ள இந்த நிறு​வனம் தொடர்​புடைய இடங்​கள் என சென்னை மற்​றும் புறநகரில் 20 இடங்​களில் நேற்று சுமார் 100 அதி​காரி​கள் தனித்​தனி குழுக்​களாக பிரிந்து சோதனை நடத்​தினர்.

கடல் நீரில் இருந்து பல்​வேறு மூலப்​பொருட்​களை பிரித்​தெடுத்து ரசாயனப் பொருட்​களை உற்​பத்தி செய்து வரும் இந்த நிறு​வனம் வரி ஏய்ப்​பில் ஈடு​படு​வ​தாக வரு​மான வரித் துறைக்கு புகார் சென்​றது. இதையடுத்​து, இந்த நிறு​வனம் கடந்த காலங்​களில் தாக்​கல் செய்த வரு​மான வரி படிவங்​களை அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். அதில், வரி ஏய்ப்பு நடந்​ததற்​கான முகாந்​திரம் இருந்​த​தால், சோதனை நடத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

இந்த சோதனை​யின்​போது, வெளி​நாடு​களில் கொள்​முதல் மற்​றும் ஏற்​றுமதி செய்​தது தொடர்​பான ஆவணங்​கள், முதலீடு தொடர்​பான ஆவணங்​களை கைப்​பற்றி அதி​காரி​கள் ஆய்வு செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இந்த சோதனை ஓரிரு நாட்​கள் நீடிக்க வாய்ப்பு உள்​ளது. சோதனை முடிந்த பிறகே முழு​மை​யான விவரங்​கள் வெளி​யிடப்​படும் என்று வரு​மான வரித் துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x