Published : 05 Sep 2025 06:00 AM
Last Updated : 05 Sep 2025 06:00 AM

அன்​பு, அறம், அமை​தி, ஒற்​றுமை தழைக்​கட்​டும்: முதல்​வர், தலை​வர்​கள் ஓணம் திரு​நாள் வாழ்த்து

சென்னை: ஓணம் பண்​டிகை இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அதன் விவரம்:

முதல்​வர் ஸ்டா​லின்: நல்​லாட்சி புரிந்த மாவலி மன்​னனை நினை​வு​கூரும் கொண்​டாட்​ட​மாக மலை​யாளி​கள் ஓணத்​தைப் போற்றி வரு​கின்​றனர். திரா​விட உணர்​வெழுச்​சி​யுடன் தமிழகத்​துக்கு உறு​துணை​யாக நின்​று, தென்​னகத்​தின் தனிச்​சிறப்பை பறை​சாற்​றும் மலை​யாள சகோ​தர, சகோ​தரி​கள் அனை​வருக்​கும் இந்த ஓணம் பொன்​னோண​மாக திகழ வாழ்த்​துகள்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: திரு​வோணத் திரு​நாளான இந்த நன்​னாளில், இல்​லம்​தோறும் அன்​பும், அமை​தி​யும் நில​வட்​டும். மகிழ்ச்​சி​யும் செல்​வ​மும் பெரு​கட்​டும்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: அகந்தை அறவே அகற்​றப்பட வேண்​டும். ஒற்​றுமை ஓங்கி வளர வேண்​டும் என்ற உயரிய குறிக்​கோளோடு கொண்​டாடப்​படு​வது ஓணம் திரு​நாள். இந்த குறிக்​கோளை அனை​வரும் பின்​பற்ற வேண்​டும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: எந்​த​வித வேறு​பாடுமின்றி பண்​பாடு, கலாச்​சா​ரத்தை தனித்​தன்​மை​யுடன் காப்​பாற்​றி, சமூக நல்​லிணக்​கத்​தோடு தமிழகத்​தில் வாழ்ந்து வரும் மலை​யாள பெரு​மக்​கள் அனை​வருக்​கும் ஓணம் திரு​நாள் வாழ்த்​துகள்.

பாமக தலை​வர் அன்​புமணி: ஓணம் திரு​நாளை போலவே எல்லா நாட்​களி​லும் மக்​கள் மகிழ்ச்​சி​யாக வாழ​வும், அன்​பு, அறம், அமை​தி, சகோ​தரத்​து​வம், சமத்​து​வம், மனிதநே​யம் ஆகியவை தழைத்​தோங்​க​வும் வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்துள்ளனர்.

ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து, தமாகா தலைவர் ஜி.கே.​வாசன், பெருந்​தலைவர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், வி.கே.சசிகலா, முன்​னாள் எம்​.பி. திரு​நாவுக்​கரசர் உள்​ளிட்​டோரும் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

பாஜக மாநில தலைமை அலு​வல​க​த்​தில் மாநில துணை தலை​வர் கரு.​நாக​ராஜன் தலை​மை​யில்​ பாஜக​வினர்​ ஓணம்​ பண்டிகையை கொண்டாடினர். கல்லூரிகளிலும் ஓணம் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x