Published : 05 Sep 2025 07:00 AM
Last Updated : 05 Sep 2025 07:00 AM

தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்: மின் வாரியம் கொடுத்த அதிர்ச்சி

திருநெல்வேலி: ​நாங்​குநேரி அருகே வீட்டு மின் கட்​ட​ண​மாக ரூ.1.61 கோடி செலுத்த வேண்​டும் என்று மின் வாரி​யத்​திலிருந்து வந்த தகவலால் தொழிலாளி குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். நெல்லை மாவட்​டம் நாங்​குநேரி அருகே மூலைக்​கரைப்​பட்டி மின் வாரிய கோட்​டத்​துக்கு உட்​பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்​தவர் தொழிலாளி மாரியப்​பன். நான்கு பேர் கொண்ட இவரது வீட்டுக்கான மின் கட்​ட​ணத்தை கடந்த சில நாட்​களுக்​கு​முன் ஊழியர் ஒரு​வர் கணக்​கீடு செய்​து​விட்டு சென்​றிருந்​தார்.

இதை தொடர்ந்​து, மின்​கட்டண விவரம் மாரியப்​பனின் செல்​போனுக்கு வந்​துள்​ளது. மின் கட்​ட​ணம் ரூ. 1 கோடியே 61 லட்​சத்து 31 ஆயிரத்து 281 என்று குறிப்​பிடப்​பட்​டு இருந்ததால், மாரியப்​பனின் குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர்.

இதுகுறித்​து, மின்​வாரிய அதி​காரி​களின் கவனத்​துக்கு கொண்டு சென்​றனர். மின்​வாரிய அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். தொழில்​நுட்​பக் கோளாறு மற்​றும் மனித தவறு காரண​மாக மின்​நுகர்​வோருக்கு அதி​கப்​படி​யான மின்​கட்​ட​ணம் வந்​துள்​ளது தெரிய​வந்​தது. தவறான மின் அளவை திருத்​தம் செய்​து, சரி​யான மின்​அளவு பதிவேற்​றம் செய்​யப்​பட்டு மாரியப்​பனின் வீட்டு மின் இணைப்​புக்​கான கட்​ட​ணம் ரூ.494 என்று கணக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x