Published : 04 Sep 2025 05:37 AM
Last Updated : 04 Sep 2025 05:37 AM
சென்னை: முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி நாளை (செப்.5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதி மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், கிளப்பார்கள், ஓட்டல் பார்கள், மதுபான விற்பனையகங்கள், மதுபானக்கூடங்கள் போன்றவற்றில் நாளை மதுபானம் விற்பனைசெய்யக்கூடாது.
அனைத்து மது விற்பனை கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT