Published : 04 Sep 2025 06:32 AM
Last Updated : 04 Sep 2025 06:32 AM

அறவழியில் போராடிய அரசு மருத்துவர் சங்க தலைவரை பழிவாங்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல் 

சென்னை: கோரிக்​கைகளுக்​காக அறவழி​யில் போராடிய அரசு மருத்​து​வர் சங்க தலை​வரை பணி​யிட மாற்​றம் செய்து பழிவாங்கக் கூடாது என்​று, பாமக தலை​வர் அன்​புமணி, அரசு மருத்​து​வர்​கள் கூறியுள்​ளனர்.

இது தொடர்​பாக, பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்துவர்கள், செவிலியர்​கள் எண்​ணிக்​கையை அதி​கரிக்க வேண்​டும். மத்​திய அரசு மருத்​து​வர்​களுக்கு இணை​யான ஊதி​யம் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சேலம் மாவட்​டம் மேட்​டூர் முதல் சென்னை கலைஞர் நினை​விடம் வரை அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு​வினர் நடைபயணம் மேற்​கொண்​டனர்.

இதற்​காக, குழு​வின் தலை​வர் மருத்​து​வர் பெரு​மாள் பிள்​ளையை சென்​னையி​லிருந்து நாகப்​பட்​டினம் அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டிருப்​பதும், அவருக்கு குற்ற குறிப்​பாணை 17-பி வழங்​கப்​பட்​டிருப்​பதும் கண்​டிக்​கத்​தக்​கவை. அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகள் மிக​வும் நியாய​மானவை. அவற்றை நிறைவேற்​று​வதற்கு பதிலாக அவற்​றுக்​காக குரல் கொடுக்​கும் மருத்​து​வர்​களை பழி​வாங்​கு​வது நியாயமல்ல. இந்த நடவடிக்​கைகளை கைவிட வேண்​டும்.

அரசு மருத்​து​வர்​களின் நியாய​மான கோரிக்​கைகள் அனைத்​தை​யும் உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும் என்று அவர் தெரி​வித்​துள்​ளார். மருத்​து​வர் பெரு​மாள் பிள்ளை மீதான பழி​வாங்​கும் நடவடிக்​கையை ரத்து செய்ய வேண்​டும் என்று அரசு மருத்​து​வர்​கள் மற்​றும் பட்​டமேற்​படிப்பு மருத்​து​வர்​கள் சங்​கத்​தின் தலை​வர் சாமி​நாதன், பொதுச்​செய​லா​ளர் ராமலிங்​கம், சமூக சமத்​து​வத்​துக்கான டாக்​டர்​கள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் மருத்​து​வர் ஜி.ஆர்​.ர​வீந்​திர​நாத் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்​துள்​ளனர்.

இது தொடர்​பாக, அரசு மருத்​து​வர்​களிடம் கேட்டபோது, “அரசின் இந்த நடவடிக்கை 19 ஆயிரம் அரசு மருத்​து​வர்​களுக்​கும் வெந்த புண்​ணில் வேல் பாய்ச்​சுவது போல வேதனையை ஏற்​படுத்தி உள்​ளது. மருத்​து​வர் பெரு​மாள் பிள்ளை மீதான நடவடிக்​கையை ரத்து செய்ய வேண்​டும். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்​படி அரசு மருத்​து​வர்​களுக்கு ஊதி​யம் வழங்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை முதல்​வர் நிறைவேற்​ற வேண்​டும்​” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x