Published : 04 Sep 2025 06:20 AM
Last Updated : 04 Sep 2025 06:20 AM

நண்பரின் கிட்னி தானத்தை ஏற்று சிகிச்சை தர அனுமதி: நட்பை ஆவணப்படுத்த முடியாது என நீதிமன்றம் கருத்து

சென்னை: குடும்ப நண்​பரின் கிட்னியை பெற்று அறு​வைசிகிச்சை மேற்​கொள்ள அனு​மதி அளித்து உயர் நீதிமன்றம் உத்​தர​விட்டுள்ளது. தஞ்​சாவூரை சேர்ந்த வி.பெரிய​சாமி என்​பவர் சிறுநீரக பாதிப்​பால் அவதிப்​பட்டு வந்த நிலை​யில், அவரது குடும்ப நண்​ப​ரான ஈரோட்டை சேர்ந்த சி.கணேசன் என்​பவர், தனது கிட்​னியை தானம் அளிக்க முன்​வந்​துள்​ளார்.

இதற்​காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்​கான அங்​கீ​காரக் குழு​விடம் விண்​ணப்​பிக்​கப்​பட்​டது. இது தொடர்​பாக ஈரோடு மாவட்ட ஆட்​சி​யர் அளித்த அறிக்​கை​யில் கணேசனும், பெரிய​சாமி​யும் குடும்ப நண்​பர்​கள் என்​பதை நிரூபிக்க எந்த ஆவண, ஆதா​ரங்​களும் சமர்ப்​பிக்​கப்​பட​வில்லை என்று தெரி​வித்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பெரிய​சாமி வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் பிறப்​பித்த உத்​தர​வு: குடும்ப நட்பு அடிப்​படை​யில், அவரது நண்​பர் கிட்னி தானம் அளிக்க முன்​வந்​துள்ளார். நட்பு என்​பது உறவு ரீதி​யாகவும், உணர்வு ரீதி​யாக​வும் புனித​மானது. அதை ஆவணப்​படுத்​த முடி​யாது. எனவே, மனு​தா​ரரின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு அனு​மதி மறுத்து அங்​கீ​காரக் குழு பிறப்​பித்த உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது.

இருதரப்பும் குடும்பத்துடன் அங்கீ​காரக் குழு முன்னிலை​யில் இன்​று ஆஜராக வேண்டும். மனு​தா​ரரின் விண்ணப்​பத்தை அதி​காரி​கள் 4 வாரங்​களுக்​குள் மறு​பரிசீலனை செய்​து, முடிவு எடுக்க வேண்​டும். குடும்ப உறுப்​பினர்​கள்​தான் உடல் உறுப்​பு​களை தானம் செய்ய வேண்​டும் என சட்​டத்​தில் சொல்​ல​வில்​லை.

விலை மதிப்​பற்ற உயிரைக் காக்​கும் நோக்​கில், அன்பு மற்​றும் பாசத்​தின் அடிப்​படை​யிலேயே உடல் உறுப்பு தானங்​கள் நிகழ வேண்​டும் என்​பதே சட்​டத்​தின் அடிப்​படை நோக்​கம். இவ்​வாறு உத்​தர​விட்டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x