Published : 04 Sep 2025 06:13 AM
Last Updated : 04 Sep 2025 06:13 AM
சென்னை: தமிழ்நாடு மின்உற்பத்திக் கழக வணிக பிரிவு தலைமைப் பொறியாளர் அனுப்பிய சுற்றறிக்கை: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
இந்தப் பணிகளை வேகப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
அதேநேரம், விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்ற நேர்வுகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று, ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்ததால் பெயர் மாற்றம் செய்யும் நேர்வுகளில், வாரிசு சான்றிதழ் அல்லது அண்மை காலத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT