Published : 04 Sep 2025 06:13 AM
Last Updated : 04 Sep 2025 06:13 AM

வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை 

சென்னை: தமிழ்​நாடு மின்​உற்​பத்​திக் கழக வணிக பிரிவு தலை​மைப் பொறி​யாளர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராள​மான ஆவணங்​களை கேட்​ப​தால், வீட்டு மின்​இணைப்பு பெயர் மாற்​றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்​படு​கிறது.

இந்​தப் பணி​களை வேகப்​படுத்​தும் வகை​யில், முந்​தைய உரிமை​யாளரின் ஒப்​புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்​வோரிடம் இருந்து பெற வேண்​டிய​தில்லை என அறி​வுறுத்​தப்​படு​கிறது.

அதே​நேரம், விற்​பனை, பங்கு பிரித்​தல், பரிசளித்​தல் போன்ற நேர்​வு​களில் பெயர் மாற்​றம் செய்ய வேண்​டு​மா​னால், விற்​பனை பத்​திரம், சொத்து வரி ரசீது, நீதி​மன்ற தீர்ப்பு உள்​ளிட்​ட​வற்​றில் ஏதேனும் ஒன்​று, ஒப்​புதல் கடிதம் ஆகிய​வற்றை சமர்ப்​பிக்க வேண்​டும்.

குடும்​பத்​தின் மூத்த உறுப்​பினர்​கள் உயி​ரிழந்​த​தால் பெயர் மாற்​றம் செய்​யும் நேர்​வு​களில், வாரிசு சான்​றிதழ் அல்​லது அண்மை காலத்​தில் பெறப்​பட்ட சொத்து வரி ரசீது மற்​றும் இழப்​பீடு பத்​திரத்தை சமர்ப்​பிக்க வேண்​டும். இது தொடர்​பாக பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த தலை​மைப் பொறி​யாளர்​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x