Published : 04 Sep 2025 05:13 AM
Last Updated : 04 Sep 2025 05:13 AM

எந்த நாட்டில் இருந்தாலும் தமிழகத்தில்தான் என் மனம் இருக்கும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: எந்த நாட்​டில் இருந்​தா​லும் என் மனம் தமிழகத்தை சுற்​றித்​தான் இருக்​கும் என்று திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க. ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். ஜெர்​மனி, இங்​கிலாந்து நாடு​களுக்​குச் சென்​றுள்ள முதல்​வர் ஸ்டா​லின், தொண்​டர்​களுக்கு எழுதி​யுள்ள கடிதம்: ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்​குடன் திமுக அரசு தொடர்ந்து முன்​னேறி வரு​கிறது. அதை மேலும் விரைவுபடுத்த முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக​ ஆக. 30-ல் ஐரோப்​பிய சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கினேன்.

அன்று இரவு ஜெர்​மனி​யில் தூதரக அதி​காரி​கள் வரவேற்​றனர். மேலும், அப்​பகு​தி​யில் வசிக்​கும் தமிழர்​கள் குடும்​பம், குடும்​ப​மாக வந்து வரவேற்பு அளித்​தனர். மறு​நாள் நடைப​யிற்​சி​யின் போது சென்​னை​யில் பெய்த மழை குறித்த தகவலைக் கேட்​டறிந்​தேன். சென்​னை​யில் எங்​கும் மழை நீர் தேங்​க​வில்லை என்​பதை துணை முதல்​வர் உதயநிதி தெரி​வித்​தார். எந்த நாட்​டில், எந்த நகரில் இருந்​தா​லும் என் மனம் தமிழகத்தை சுற்​றித்​தான் இருக்​கிறது.

ஆகஸ்ட் 31 மாலை​யில் தமிழ்ச் சொந்​தங்​களை சந்​தித்​தேன். ஜெர்​மனி தமிழர்​கள் மட்​டுமல்​லாது, ஸ்வீடன், நெதர்​லாந்​து, பிரான்ஸ் மற்​றும் ஜெர்​மனி​யின் 16 மாநிலங்​களில் வசிக்​கும் தமிழர்​களும் அந்த சந்​திப்​புக்கு வந்​திருந்​தனர். ஜெர்​மனி பயணம் மூலம் தமிழகத்​தின் தொழில் வளர்ச்​சியை மேம்​படுத்​தும் வகை​யில் 26 நிறு​வனங்​களு​டன் 15,320 பேருக்கு வேலை​வாய்ப்பு அளித்​திடும் வகை​யில் ரூ.7,020 கோடி முதலீட்​டுக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

செப். 2 காலை என்​ஆர்​டபிள்யூ மாநிலத்​தின் அமைச்​சரும், அதிபரு​மான ஹென்​ரிக் வுஸ்ட்டை சந்​தித்​தேன். தமிழகத்​துடன் எந்​தெந்த வகை​யில் இணைந்து செயல்​படு​வது என்​பது குறித்து ஆலோ​சித்​தோம். ஜெர்​மனி சுற்​றுப்​பயணம் வெற்​றிகர​மாக நிறைவேறிய மகிழ்​வுடன், லண்​ட​னுக்கு விமானத்​தில் புறப்​பட்​டேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x