Published : 04 Sep 2025 12:39 AM
Last Updated : 04 Sep 2025 12:39 AM

சளி, உடல் சோர்வுடன் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

கோப்புப்படம்

சென்னை: சளி, இரு​மல், தலை​வலி, தொண்டை பாதிப்​பு, உடல் சோர்​வுடன் பரவும் காய்ச்​சலை கட்​டுப்படுத்​தும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்று தமிழக பொது சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் காலநிலை மாற்​றம் மழை உள்​ளிட்ட காரணங்​களால் வைரஸ் காய்ச்​சல் பரவல் அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக, சென்​னை, மதுரை, கோவை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் ஏராள​மான மக்​கள் காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்டு அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

மருத்துவமனைகளுக்கு உத்தரவு: சளி, இரு​மல், தலை​வலி, தொண்டை பாதிப்​பு, உடல் சோர்​வுடன் ஏற்​படும் இத்​தகைய காய்ச்​சல் பாதிப்​பின் தன்​மையை கண்​டறிவதற்​கான பரிசோதனையை தீவிரப்​படுத்த பொது சுகா​தா​ரத்துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. பரிசோதனை முடிவை விரைந்து அளித்​து, பாதிப்​புக்கு ஏற்ற உடனடி சிகிச்சை அளிப்​பதுடன், காய்ச்​சல் பாதிப்பு குறித்து தெரிவிக்​கும்​படி அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களுக்கு பொது சுகா​தா​ரத்​துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக பொது சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் கூறிய​தாவது: ஆகஸ்ட், செப்​டம்​பர் மாதங்​களில் காலநிலை மாற்​றம், மழை போன்ற காரணங்​களால் வைரஸ் காய்ச்​சல் பரவுவதற்கு உகந்த காலநிலை​யாக உள்​ளது. இரு​மல், காய்ச்சல், தலை​வலி, சளி, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை வைரஸ் காய்ச்​சலின் அறிகுறிகள் ஆகும்.

இத்​தகைய காய்ச்​சல் முதி​ய​வர்​களை அதி​கம் பாதிக்​கிறது. யாரும் சுய​மாக மருந்து கடைகளில் மருந்​துகளை வாங்கி சாப்​பிடக் கூடாது. மருத்​து​வரின் ஆலோசனைப்படி மட்​டுமே மாத்​திரை, மருந்​துகளை எடுத்துக் கொள்ள வேண்​டும். வைரஸ் காய்ச்​சல் பரவல் கண்​காணிப்பு மற்​றும் கட்​டுப்​படுத்​தும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தின​மும் எத்​தனை நபர்​கள் காய்ச்​சலால் பாதிக்​கப்​படு​கிறார்​கள் என்று கணக்​கிடப்​படு​கிறது. இது​வரை மக்​கள் அச்​சப்​படும் வகையி​லான காய்ச்​சல் பாதிப்பு பதி​வாகவில்​லை.

கூட்டத்தை தவிர்க்க வேண்டும்: காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் முகக் கவசம் அணிவதுடன், அடிக்​கடி கைகளை சுத்​த​மாக கழுவ வேண்​டும். இரு​மலின் போது கைக்​குட்டை பயன்​படுத்த வேண்​டும். அனை​வரும் முகக் கவசம் அணி​வது கட்​டா​யம் இல்​லை. பாதிப்​புக்கு உள்​ளானவர்​கள் மற்​றும் நோய் பரவல் பாதிக்​கப்பட வாய்ப்​புள்​ளவர்​கள் முகக் கவசம் அணிவது நல்​லது. காய்ச்​சல் பாதித்​தவர்​கள் திருமண நிகழ்ச்​சிகள், கூட்​ட​மான நிகழ்ச்​சிகளுக்கு செல்​வதை​யும்​ தவிர்க்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x